உலகம்

இஸ்ரேலுடன் தொடர்புடைய போர்ச்சீகல் சரக்கு கப்பலை சிறைபிடித்த ஈரான்: அதிகரிக்கும் பதற்றம்

இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையே போரில் ஹமாசுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. மேலும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த சிரியா, லெபனானின் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆயுத உதவி வழங்கி வருகிறது.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த 1ம் திகதி இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரான் புரட்சிப்படை மூத்த தளபதி முகமது ரிசா சகிதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனால், இஸ்ரேல் – ஈரான் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது

இந்நிலையில், அரபிக்கடலில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை ஈரான் இன்று சிறைபிடித்துள்ளது. போர்ச்சீகல் நாட்டை சேர்ந்த இக்கப்பல் இஸ்ரேலிய பணக்காரர் அங்கம் வகிக்கும் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.

Iran seizes Israel-linked container ship in Strait of Hormuz | CBC News

சரக்கு கப்பல் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அதை ஈரானிய கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் கப்பலுக்குள் ஆயுதங்களுடன் இறங்கிய ஈரானிய கடற்படை கமெண்டோக்கள் அதை சிறைபிடித்தனர். இந்த கப்பல் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து புறப்பட்டு இந்தியா நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது, கப்பல் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. சரக்கு கப்பலில் உள்ள மாலுமிகளில் 17 பேர் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலுடன் தொடர்புடைய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்துள்ள நிலையில் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. அதேவேளை, பிராந்தியத்தில் மோதலை தூண்டுவதற்காக ஈரான் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content