இந்தியா

திருமணமான 9 நாளில் காதலனுடன் சேர்ந்து விபரீத முடிவை எடுத்த புதுப்பெண்…!

திருமணமான 9 நாளில் தனது காதலனுடன் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், கடக் மாவட்டம், கஜேந்திரகடா தாலுகா நரேகல் நகரில் இன்று வயல் வேலைக்காக கிராம மக்கள் வந்தனர். அப்போது வயல் அருகே இருந்த மரத்தில் இரண்டு பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக நரேகல் போலீஸாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த பொலிஸார், மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தற்கொலை செய்து கொண்டது கடக் மாவட்டம், நரேகல் நகரைச் சேர்ந்த அப்பண்ணா கோரக்கி(28), லலிதா ஹலகேரி(21) என்று தெரிய வந்தது.

Things to watch for in 100 days of a relationship

இவர்கள் இருவரும் நீண்ட நாளாக காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஏப்ரல 4ம் திகதி லலிதா தனது குடும்பத்தினரின் வற்புறுத்தலால் வேறு ஒரு வாலிபரை திருமணம் செய்துள்ளார். ஆனால், தனது காதலனை அவரால் மறக்க முடியவில்லை.

இதனால் அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளனர். ஒரே நிறத்தில் ஐ லவ்யூ என அச்சிடப்பட்ட சட்டையை அணிந்தவாறு ஒரே மரத்தில் அவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பொலிஸாரின் விசாரணையில தெரிய வந்தது. திருமணமான 9 நாட்களில் காதலனுடன் புதுப்பெண் தற்கொலை செய்த சம்பவம் கடக் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content