இலங்கை செய்தி

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இதனை தெரிவித்தார்.

காலியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, அவர் இதனை குறிப்பிட்டார்.

அரசியயலமைப்பிற்கு அமைவாக, ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கி முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

திட்டமிட்டவாறு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி தனக்கு நெருக்கமானவர்களிடமும் கடந்த இரண்டு அமைச்சரவைக் கூட்டங்களிலும் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதியை இணங்க வைக்க பசில் ராஜபக்ஸ மேற்கொண்ட முயற்சிகளை தோல்வியடையச் செய்து, ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content