இலங்கை

இலங்கையில் வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்களுக்கு வெளியான தகவல்

இலங்கையில் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விரைவில் வாகன இறக்குமதியாளர்களால் விசேட அறிக்கையொன்று தன்னிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்திற்கும் இராஜாங்க அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று நிதியமைச்சில் இடம்பெற்ற நிலையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி துறை நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை வாகன இறக்குமதியை மீண்டும் தொடங்குவதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என இராஜாங்க அமைச்சர் றிப்பிட்டுள்ளார்.

அனைத்து வாகனங்களின் இறக்குமதியையும் ஒரே தடவையில் ஆரம்பிக்காமல் பல பிரிவுகளின் கீழ் மேற்கொள்வது மிகவும் நடைமுறைக்குரியது என வாகன இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content