இந்தியா ஐரோப்பா

லண்டனில் இந்திய மாணவி குத்திக் கொலை – மூவர் கைது

லண்டனில் மேற்படிப்புக்காக சென்ற இந்திய மாணவியை உடன் தங்கியிருந்த பிரேசில் நாட்டவர் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் ஐதராபாத் பகுதியை சேர்ந்த 27 வயது கொந்தம் தேஜஸ்வினி என்பவரே லண்டனில் செய்யாய்க்கிழமை கத்திக்குத்துக்கு இலக்கானவர்.தேஜஸ்வினி சம்பவயிடத்திலேயே பலியானதாக லண்டன் பொலிஸ் தரப்பு உறுதி செய்துள்ளது. மேலும், தாக்குதலுக்கு இலக்கான இன்னொரு 28 வயது பெண் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.

தேஜஸ்வினியின் உறவினர் விஜய் என்பவர் தெரிவிக்கையில், தேஜஸ்வினி மற்றும் நண்பர்கள் தங்கியிருந்த குடியிருப்பில் அந்த பிரேசில் நபர் சில நாட்களுக்கு முன்னர் தான் குடியேறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் இந்திய பெண் கத்தியால் குத்திப் படுகொலை! மூவர் அதிரடி கைது..லண்டனில் அதிர்ச்சி சம்பவம் | Woman Stabbed Murder 3 Arrested In London

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தான் தேஜஸ்வினி முதுகலைப் பட்டம் பெற லண்டன் சென்றதாக கூறப்படுகிறது. தற்போது இந்த விவகாரம் தொடர்பில் 24 வயது நபர் மற்றும் 23 வயது பெண் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ளனர்.

இவர்களுடன் இன்னொரு 23 வயது நபரும் கைதாகியுள்ளார். இதனிடையே, பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையிலேயே பிரேசில் நாட்டவர் கைதானதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஒத்துழைத்த பொதுமக்களுக்கு பொலிஸார் நன்றி தெரிவித்துள்ளனர்.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content