இலங்கை செய்தி

கொழும்பில் பிரபல ஐந்து நட்சத்திர ஹேட்டலில் வழங்கப்பட்ட சூப் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

கொழும்பில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உள்ள உணவகம் ஒன்றில் மனித பாவனைக்கு தகுதியற்ற சூப் வழங்கப்பட்டுள்ளதாக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் இரவு விருந்தொன்றின் போது இந்த சூப் பரிமாறப்பட்டதாகவும், அதன் தரம் தொடர்பில் அதிருப்தி நிலவுவதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு நிறுவனம் ஒன்றிடம் இருந்து முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த முறைப்பாட்டின் பிரகாரம் பொது சுகாதார பரிசோதகர்கள் சூப்பின் மாதிரிகளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்ததில் இரவு உணவின் போது சூப்புடன் வழங்கப்பட்ட வெள்ளை மிளகாயில் பிரச்சனை இருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் ஹோட்டல் நிர்வாகத்திற்கு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஹோட்டலில் இருந்து பொருத்தமற்ற சூப் பரிமாறப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹோட்டல் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஹோட்டலின் உணவகத்தில் பரிமாறப்படும் சூப்பினால் இந்த நிலை ஏற்படவில்லை எனவும், அதனை சாப்பிட்ட வாடிக்கையாளர் அதில் வெள்ளை மிளகாயை சேர்த்ததால், சாப்பிட செல்லும் போது சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக வழங்கப்பட்ட முழு வெள்ளை மிளகு கையிருப்பையும் ஹோட்டல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை எனவும் ஹோட்டல் நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்கு நிர்வாகம் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு ஆதரவை வழங்கியதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content