ஐரோப்பா

காசாவிற்கு மனிதாபிமான உதவி; உலக நாடுகளுடன் மாநாட்டை நடத்தும் பிரான்ஸ்

காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து குண்டுவீச்சு நடத்தி வரும் நிலையில், பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக உலக நாடுகளுடன் மாநாட்டை நடத்த பிரான்ஸ் முடிவு செய்துள்ளது.

பிரான்ஸ் 80 நாடுகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, ஜோர்டான், எகிப்து, வளைகுடா நாடுகள் ஆகிய நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக பிரான்ஸ் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள் என பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய அதிகாரிகள் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், பாலஸ்தீனப் பிரதமர் முஹம்மது ஷத்தையாவும் மாநாட்டில் கலந்துகொள்வார் என ஜனாதிபதி அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மோதலின் மனிதாபிமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண அழைப்பு விடுத்தார்.

அத்துடன் ,முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனத்தின் உணவு, தண்ணீர், மருத்துவ உபகரணங்கள், மின்சாரம் மற்றும் எரிபொருள் ஆகியவற்றிற்கான தேவைகளை நிவர்த்தி செய்ய மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்.

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பின் (UNRWA) உயர்மட்ட உதவி அதிகாரியும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC) தலைவரும் காசா பகுதியில் உள்ள அவசரத் தேவைகள் குறித்த விவரங்களை வழங்குவார்கள் என எதிர்பார்ப்பதாக இம்மானுவேல் மக்ரோன் கூறினார்.

பாரிஸ் ஏற்கனவே 20 மில்லியன் யூரோக்கள் ($21.4 மில்லியன்) மனிதாபிமான உதவியாக பாலஸ்தீனத்திற்கு ஐ.நா மற்றும் பிற பங்காளிகள் மூலம் வழங்கியுள்ளது.

மேலும், மூன்று விமானங்கள் மூலம் 54 டன் நிவாரணப் பொருட்கள் எகிப்துக்கு அனுப்பப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(Visited 3 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content