வட அமெரிக்கா

கனடாவில் வீடு புகுந்து வாள்வெட்டு; பொலிஸாரிடம் சிக்கிய இந்திய வம்சாவளி இளைஞர்கள்

ஒன்ராறியோவில் வீடு புகுந்து தாக்கியது, கொலை முயற்சி உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ள இருவர் மீது பீல் பிராந்திய பொலிஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

கடந்த ஆண்டு பிராம்டன் பகுதியில் வீடு புகுந்து தாக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் படுகாயத்துடன் உயிர் தப்பியிருந்தார். இச்சம்பவத்தில் தொடர்புடைய இரு இளைஞர்கள், 22 வயது அபிஷேக் அபிஷேக் மற்றும் ஹர்மன்தீப் பெஹ்லீம் ஆகிய இருவர் மாயமாகியிருந்த நிலையில் தற்போது கைதாகியுள்ளனர்.

2022 மார்ச் மாதம் பல பேர்கள் கொண்ட குழு ஒன்று மேஃபீல்ட் சாலையில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் அத்துமீறி நுழைந்துள்ளது. சம்பவத்தின் போது அந்த குடியிருப்பில் 6 பேர் இருந்துள்ளனர்.இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஞ்சியவர்கள் லேசான காயங்களுடன் தப்பியுள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு 22 வயது இளைஞர்களை செவ்வாய்க்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த இருவர் மீதும் 17 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணை அதிகாரிகளுக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

(Visited 11 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content