ஐரோப்பா

LNG இறக்குமதி தடை உட்பட ரஷ்யாவிற்கு எதிரான 19வது தடை தொக்குப்பை அங்கிகரித்த EU

  • October 23, 2025
  • 0 Comments

மோதல் தொடர்பாக ரஷ்யாவிற்கு எதிரான தடைகளின் 19வது தொகுப்பை ஐரோப்பிய ஒன்றிய(EU) உறுப்பு நாடுகள் புதன்கிழமை(22) அங்கீகரித்தன, இதில் ரஷ்ய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு(LNG) இறக்குமதி மீதான தடையும் அடங்கும் என்று ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் டென்மார்க் தலைவர் தெரிவித்துள்ளார். LNG இறக்குமதி தடை இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும், குறுகிய கால ஒப்பந்தங்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகு முடிவடையும் மற்றும் நீண்ட கால ஒப்பந்தங்கள் ஜனவரி 1, 2027-க்கு முன் நிறுத்தப்படும். இந்த முழுத் தடையும், ரஷ்ய […]

இந்தியா

இரு தனித்தனி சோதனைகளில் 19 கோடிக்கு மேல் மதிப்புள்ள போதைபொருளை பறிமுதல் செய்த மும்பை சுங்கத்துறையினர்

  • October 23, 2025
  • 0 Comments

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி அனைத்துலக விமான நிலையத்திற்கு ஹாங்காங்கிலிருந்து போதைப்பொருள் கடத்திச் செல்வதாகச் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹாங்காங்கிலிருந்து மும்பை வந்த பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் தீவிரச் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையின்போது இரண்டு பயணிகளிடமிருந்து 7.864 கிலோ கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 7.86 கோடி எனத் தெரிவிக்கப்பட்டது. சந்தேகநபர் இருவரையும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது […]

உலகம்

700,000 ஆண்டுகளுக்கு பின் உயிர்ப்புடன் இருப்பதற்கான சமிக்ஞைகளை வெளியிட்ட எரிமலை!

  • October 23, 2025
  • 0 Comments

ஈரான்-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள டஃப்தான் எரிமலை  (Taftan volcano) தற்போது உயிர்ப்புடன் இருப்பதற்கான அறிகுறிகளை காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 700,000 ஆண்டுகளாக குறித்த எரிமலை செயலற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜியோபிசிகல் (Geophysical) ரிசர்ச் லெட்டர்ஸில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ஜூலை 2023 மற்றும் மே 2024 க்கு இடையில் எரிமலையின் உயரம் 3.5 அங்குலம் உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது அதன் மேற்பரப்பிற்கு அடியில் குறிப்பிடத்தக்க வாயு அழுத்தம் அதிகரிப்பதைக் குறிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் குறித்த […]

உலகம்

மெக்சிக்கோ(Mexico)வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு

  • October 23, 2025
  • 0 Comments

மெக்சிக்கோவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது. மெக்சிகோவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் பெய்த அடைமழையால் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் ஏராளமான முக்கிய இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான, மலைப் பகுதிகளின் பாதைகள் நிலச்சரிவில் முழுவதுமாக முடங்கியுள்ளதால், அங்கு சிக்கியவர்களை மீட்பது கடும் சவாலானதாக மாறியுள்ளது. இந்த நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றின் பாதிப்புகளில் இதுவரை 78 பேர் பலியானதாகவும், 27 பேர் மாயமானதாகவும், மெக்சிகோ […]

இலங்கை

வடக்கு, கிழக்கில் 700 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் மக்களிடம் ஒப்படைப்பு!

  • October 23, 2025
  • 0 Comments

வடக்கு மற்றும் கிழக்கில் 700 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பொதுமக்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துணை அமைச்சர் அருணா ஜெயசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் எழுப்பிய வாய்மொழி கேள்விக்கு பதிலளித்த துணை அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஜனவரி 1, 2025 நிலவரப்படி வடக்கில் மொத்தம் 672.24 ஏக்கர் நிலங்கள் பொதுமக்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். 86.24 ஏக்கர் தனியார் நிலங்களும், இராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட 586 ஏக்கர் நிலங்களும் இவற்றில் அடங்குவதாகவும் […]

செய்தி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!

  • October 23, 2025
  • 0 Comments

ரஷ்யா -உக்ரைன் போரில் மொஸ்கோ மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.  இதன்காரணமாக எண்ணெய் விலையானது இன்று 3.4 சதவீதத்தால்  உயர்ந்துள்ளது. இதற்கமைய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் இப்போது  64.73 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. போர் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், சமாதான ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்கவும் ட்ரம்ப் ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை பயன்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் (Rosneft ) மற்றும் லுகோயில் (Lukoil) ஆகிய […]

பொழுதுபோக்கு

அனல் பறக்கும் சரிகமப மேடை…! நடுவர்களின் அதிரடி தீர்ப்பு… சபேசனின் நிலை என்ன?

  • October 23, 2025
  • 0 Comments

தங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவர இளைஞர்களுக்கு கிடைத்த சரியான ஒரு இடம்தான் ஜீ தமிழ் சரிகமப மேடை. இந்த மேடையை ஏரளமான இலங்கையர்களும் அலங்கரித்துள்ளனர். எந்த சேனலிலும் கிடைக்காத அந்தஸ்தும் பெருமையும் ஜீ தமிழில் இலங்கையர்களுக்கு கிடைத்தது என்றால் மிகையாகாது. அந்த வகையில் தற்போது ஜீ தமிழில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான சரிகமப சீசன் 5 இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இதில் இலங்கையரான சபேசனும் பைனலிஸ்ட் கனவுடன் காத்திருக்கின்றார். இறுதிச்சுற்றுக்கான இந்த வாரம் நிகழ்ச்சியில் Duet […]

பொழுதுபோக்கு

மனோரமாவின் மகன் பூபதி காலமானார்

  • October 23, 2025
  • 0 Comments

மறைந்த நகைச்சுவை நடிகை மனோரமாவின் மகனும், நடிகருமான பூபதி இன்று காலமானார். நடிகை மனோரமா 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் சினிமாவில் கோலோச்சி, 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, உலக சாதனை புரிந்தவர். பூபதி, மனோரமாவின் ஒரே மகனாவார். பூபதி, சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். பூபதியின் மறைவு, அவரது குடும்பத்தினரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. காலஞ்சென்ற பூபதியின் உடல், பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மனோரமாவின் ரசிகர்களும், திரையுலகினரும் பூபதி மறைவுக்குத் தங்கள் ஆழ்ந்த […]

ஐரோப்பா

ரஷ்யாவிற்காக உளவு பார்த்த மூவர் லண்டனில் கைது!

  • October 23, 2025
  • 0 Comments

ரஷ்ய உளவுத்துறை சேவைகளுக்கு உதவிய சந்தேகத்தின்பேரில் மூன்று பேர் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குறித்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ காவல் துறை தெரிவித்துள்ளது. 48, 45 மற்றும் 44 வயதுடைய ஆண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள  பயங்கரவாத எதிர்ப்பு காவல் துறையின் தலைவர் கமாண்டர் டொமினிக் மர்பி (Dominic Murphy) “வெளிநாட்டு உளவுத்துறை சேவைகளால் ‘பிரதிநிதிகள்’ என்று […]

இலங்கை

இறுதிப்போரின்போது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச விசாரணையே வேண்டும்!!

  • October 23, 2025
  • 0 Comments

இறுதிப்போரின்போது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உள்ளக பொறிமுறை ஊடாக நீதி கிட்டாது. எனவே, சர்வதேச விசாரணையே வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிட்ட அவர், ” 2009 இறுதிப்போரின்போது வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த மக்கள், புலிகள் சவேந்திர சில்வாவின் அனுமதியுடன் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் தகவல் […]

error: Content is protected !!