உலகம்

அமெரிக்காவில் விமானம் தீப்பிடித்து விபத்து! 3 பேர் பலி – பலரின் நிலை கவலைக்கிடம்

  • November 5, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் கென்டக்கியில் (Kentucky) உள்ள லூயிஸ்வில்லி சர்வதேச விமான நிலையத்தில் (Louisville International Airport) ஒரு சரக்கு விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் 11 பேர் காயமடைந்ததாகவும் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போதைய இறப்பு எண்ணிக்கை மூன்று என்றாலும், எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கென்டக்கி ஆளுநர் ஆண்டி பெஷியர் (Andy Beshear) கூறினார். இந்த விபத்து, யுனைடெட் பார்சல் சர்வீஸால் […]

கருத்து & பகுப்பாய்வு

உலகில் மிகவும் விசித்திரம் நிறைந்த ஆபத்தான நதி – அமேசான் காடுகளில் கண்டுபிடிப்பு

  • November 5, 2025
  • 0 Comments

உலகில் வேறு எங்கும் காண முடியாத மிகவும் விசித்திரமான ஒரு இயற்கை நிகழ்வு பெரு நாட்டிலுள்ள அமேசான் மழைக்காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூரியனின் வெப்பத்தால் நீரை கொதிக்க வைக்கும் நதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை நிகழ்வுக்கு ஷனாய்-டிம்பிஷ்கா (Shanay-Timpishka) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நதியின் நீரில் பதிவான வெப்பநிலை பெரும்பாலும் 80 பாகை செல்சியஸ் முதல் 95 பாகை செல்சியஸ் வரை உள்ளது. சில இடங்களில் நீரின் கொதிநிலை வரைக்கும் வெப்பம் செல்வதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். விசித்திரமான […]

இந்தியா

இந்தியாவில் வீடொன்றுக்குள் இரகசியங்களை அம்பலப்படுத்திய தூசி உறிஞ்சும் சாதனம்

  • November 5, 2025
  • 0 Comments

இந்தியாவில் வீடொன்றில் பயன்படுத்தப்பட்ட தூசி உறிஞ்சும் சாதனம் (Vacuum Cleaner) மூலம் பல அந்தரங்கத் தகவல்கள் கசிந்துள்ளதாக, வீட்டின் உரிமையாளர் குற்றம் சுமத்தியுள்ளார். குறித்த சாதனம் தனது வீட்டுத் தகவல்களை ரகசியமாக அதன் உற்பத்தியாளருக்கு அனுப்பியுள்ளதாக டெல்லியை சேர்ந்த ஹரிஷங்கர் நாராயணன் என்பவர் தெரிவித்துள்ளார். அண்மையில் iLife A11 எனும் ஸ்மார்ட் தூசி உறிஞ்சும் சாதனத்தை கொள்வனவு செய்துள்ளார். அந்தச் சாதனம் அசாதாரணமாக அதிக அளவில் தகவல் பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதையும் கவனித்துள்ளார். சாதனத்தை ஆய்வு செய்த […]

இலங்கை

இலங்கையில் உள்ள ஜெர்மன் தூதரகத்தின் விசேட அறிவிப்பு

  • November 5, 2025
  • 0 Comments

ஷெங்கன் விசா விண்ணப்பங்களுக்கான அனைத்து சந்திப்புகளும் VFS குளோபல் இயக்கும் புதிய வலைத்தளம் மூலம் செய்யப்பட வேண்டும் என இலங்கையில் உள்ள ஜெர்மன் தூதரகம் அறிவித்துள்ளது. நவம்பர் மாதம் 3ஆம் திகதி முதல், இந்த நடைமுறை அமுலுக்கு வந்துள்ளதாக தூதரகம் குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய, விண்ணப்பதாரர்கள் இப்போது https://visa.vfsglobal.com/lka/en/deu/login என்ற VFS வலைத்தளம் மூலம் தங்கள் சந்திப்புகளை முன்பதிவு செய்ய வேண்டும். அத்துடன், முந்தைய சந்திப்பு முறையின் கீழ் செய்யப்பட்ட அனைத்து பதிவுகளும் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து […]

உலகம்

சீனாவின் இராணுவ நடவடிக்கை தீவிரம் – கவலையில் ஜப்பான்

  • November 5, 2025
  • 0 Comments

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீன இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருவது குறித்து ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கொய்ஸூமி (Shinjiro Koizumi) கவலை வெளியிட்டுள்ளார். மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ASEAN) மற்றும் பிற பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டங்களுக்கு இடையே, சீன பாதுகாப்பு அமைச்சர் டோங் ஜூனுடன் (Dong Jun) நடந்த சந்திப்பின் போது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். கடந்த வருடம் நவம்பர் மாதத்திற்கு பின்னர் இரு நாடுகளின் பாதுகாப்புத் தலைவர்களுக்கும் இடையே […]

உலகம் செய்தி

அமெரிக்காவில் அதிர்ச்சி – மருந்துகளுக்கு காத்திருந்த பெண்ணுக்கு பொதியில் வந்த மனிதக் கைகள்

  • November 5, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் இணையம் ஊடாக மருந்துகளை கொள்வனவு செய்த பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதன்படி, கென்டக்கி மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மருந்துகளுக்கு பதிலாக, மனிதக் கைகளைக் கொண்ட பொதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தனது வீட்டுக்கு விநியோகம் செய்த பொதியைத் திறந்து பார்த்த போது, உள்ளே பனிக்கட்டிகள் நிரப்பப்பட்ட நிலையில் மனிதக் கைகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த விசாரணை அதிகாரிகள், பொதியில் வந்த உடற்பாகங்களைக் […]

உலகம் செய்தி

ஈரான் சிறையில் இருந்து இரண்டு பிரெஞ்சு நாட்டவர்கள் விடுதலை

  • November 4, 2025
  • 0 Comments

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானில்(Iran) தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பிரெஞ்சு நாட்டினரை விடுவித்துள்ளதாக பிரான்ஸ்(France) ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்ட ஈரானிய மாணவருக்குப் பதிலாக இந்த விடுவிப்பு வந்துள்ளது. 41 வயது செசிலி கோஹ்லர்(Cécile Kohler) மற்றும் 72 வயது ஜாக் பாரிஸ்(Jacques Paris) ஆகியோர் எவின்(Evin) சிறையில் இருந்து வெளியேறி தெஹ்ரானில்(Tehran) உள்ள பிரெஞ்சு தூதரகத்திற்கு செல்லும் வழியில் உள்ளனர்” என்று மக்ரோன் Xல் பதிவிட்டுள்ளார். மே 2022ல் ஒரு […]

உலகம் செய்தி

பிரபல மியான்மர் மோசடி உறுப்பினர்களுக்கு மரண தண்டனை விதித்த சீனா

  • November 4, 2025
  • 0 Comments

தென்கிழக்கு ஆசியாவில் மோசடி நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான பரந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக மியான்மரின் பாய் மாஃபியாவின்(Bai mafia) ஐந்து உறுப்பினர்களுக்கு சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. குறிப்பாக மனித கடத்தல் மற்றும் மோசடி துறையில் பாதிக்கப்படக்கூடிய தொழிலாளர்களை பாதுகாக்கும் முயற்சிகளுக்கு மத்தியில் இந்த தீர்ப்பு வந்துள்ளது. ஷென்சென்(Shenzhen) இடைநிலை மக்கள் நீதிமன்றம், 21 பேரை கொண்ட மாஃபியாவின் தலைவரான பாய் சூச்செங்(Bai Xucheng) மற்றும் அவரது மகன் பாய் யிங்காங்(Bai Yinggang) மற்றும் மூன்று கூட்டாளிகளான […]

உலகம் செய்தி

நவம்பர் 18ம் திகதி டிரம்பை சந்திக்கும் சவுதி பட்டத்து இளவரசர்

  • November 4, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன்(Donald Trump) அதிகாரப்பூர்வமாக ஒரு சந்திப்பை நடத்துவதற்காக சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்(Mohammed bin Salman) இந்த மாத இறுதியில் வாஷிங்டனுக்கு வருகை தருவார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஏழு ஆண்டுகளில் அமெரிக்க தலைநகருக்கு சவுதி அரேபியா இளவரசரின் இரண்டாவது வருகை இதுவாகும். இஸ்ரேல்Israel), ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(United Arab Emirates), பஹ்ரைன்(Bahrain), சூடான்(Sudan) மற்றும் மொராக்கோ(Morocco) உள்ளிட்ட பல அரபு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை இயல்பாக்குவதற்காக […]

இலங்கை செய்தி

இலங்கையின் முன்னாள் மீன்வள கூட்டுத்தாபன தலைவர் உட்பட 4 அதிகாரிகள் கைது

  • November 4, 2025
  • 0 Comments

இலங்கை மீன்வளக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் லலித் தௌலகல(Lalith Dhaulagala) மற்றும் மூன்று அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2020ம் ஆண்டு இலங்கை மீன்வளக் கூட்டுத்தாபனத்திற்காக தேவையற்ற நேரத்தில் மணிக்கு 2,000 கிலோ மீன்களை பொதியிடும் அதிக திறன் கொண்ட பொதியிடல் இயந்திரத்தை வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன்படி, இதன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 5,856,116 இழப்பை ஏற்படுத்தியதற்காக ஊழல் குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கூட்டுத்தாபனத்தின் […]

error: Content is protected !!