ஐரோப்பா

ஸ்டார்மருக்கு எதிரான அச்சுறுத்தல் கருத்துக்கள் – Reform UK கட்சியின் உறுப்பினர் இடைநீக்கம்!

  • November 20, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் Reform UK கட்சியின் உறுப்பினர் டாம் பிக்கப் ( Tom Pickup) கட்சியால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இஸ்லாமிய இனப்படுகொலை மற்றும் பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மருக்கு (Sir Keir Starmer) எதிரான அச்சுறுத்தல்கள் கொண்ட  வாட்ஸ்அப் குழு தொடர்பாக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் ஒரு அரசாங்க அமைச்சர் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும் டாம் பிக்கப் ( Tom Pickup) மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Reform UK கட்சியின் உயர்மட்ட […]

பொழுதுபோக்கு

பிரதீப் ரங்கனாதனின் புதிய படம் தொடர்பான புதிய அப்டேட்…

  • November 20, 2025
  • 0 Comments

‘கோமாளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, தற்போது நடிகாக பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் பிரதீப் ரங்கனாதன். ‘லவ் டுடே’,’டிராகன்’,’டியூட்’ படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில், பிரதீப் ரங்கநாதன் மீண்டும் ஏஜிஎஸ் புரொடக்ஷனுடன் இணைவதாகவும், இந்தப் புதிய படத்தை அவரே இயக்கி கதாநாயகனாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. புதிய படம் தொடர்பாக அடுத்த இரண்டு வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

செவ்வாய் கிரகத்தில் கண்டறியப்பட்ட பாறை – உயிர்கள் வாழ்ந்தமைக்கான அடையாளமா?

  • November 20, 2025
  • 0 Comments

செவ்வாய் கிரகத்தில் பெர்செவரன்ஸ் (Perseverance), ஜெஸெரோ(Jezero)  பள்ளத்தில் ஃபிப்சாக்ஸ்லா (Phippsaksla) என்று அழைக்கப்படும் அசாதாரண பாறை ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக நாசா  அறிவித்துள்ளது. நாசாவின் பெர்செவரன்ஸ் செவ்வாய் ரோவரின் (Perseverance Mars rover) வழியாக இந்த பாறை கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தோராயமாக 31 அங்குல விட்டம் கொண்ட இந்தப் பாறை, பூமியின் மையத்தில் காணப்படும் இரும்பு-நிக்கல் ஆகிய தாது பொருட்களுடன்  தொடர்புடைய கூறுகளை கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெர்செவரன்ஸ் (Perseverance), ஜெஸெரோ பள்ளத்தில் […]

பொழுதுபோக்கு

DNA-க்கு பயந்து தலைமறைவான ரங்கராஜ்?

  • November 20, 2025
  • 0 Comments

சிறிது நாட்கள் ஓய்ந்திருந்த ஜாய் கிரிஸில்டா – ரங்கராஜ் பிரச்சினை தறபோது மீண்டும் வந்துவிட்டது. குழந்தை தன்னுடையது என்று நிரூபனமாகி விட்டால் குழந்தைக்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருந்த நிலையில், DNA டெஸ்ட் எடுக்க கோர்ட் உத்தரவிட்டது. இதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் காணாமல் போய்விட்டாதாக ஜாய் நக்கலாக கூறியுள்ளார். மாதம்பட்டி ரங்கராஜை பங்கமாக கலாய்த்திருப்பது சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது. இந்நிலையில் டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு வருவதாக சொல்லிவிட்டு வராமல் மாதம்பட்டி […]

செய்தி

நுகேகொடை கூட்டம்; இறுதி நேரத்தில் ஐதேக எடுத்துள்ள முடிவு!

  • November 20, 2025
  • 0 Comments

நுகேகொடையில் நாளை நடைபெறவுள்ள பேரணியில் ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயம் பங்கேற்கும் என்று அக்கட்சியின் உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார். கூட்டு எதிரணி எனக் கூறிக்கொள்ளும் தரப்பினரால் மாபெரும் மக்கள் குரல் என்ற தொனிப்பொருளின்கீழ் அரசாங்கத்துக்கு எதிராக நாளை நுகேகொடையில் பேரணி: கூட்டம் நடத்தப்படுகின்றது. இக்கூட்டத்தில் தமது கட்சி பங்கேற்கும் என ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பத்தில் அறிவித்திருந்தாலும் அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தற்போது திடீரென பின்வாங்கியுள்ளனர். தாம் மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என நவீன் […]

ஐரோப்பா

ஐ.நா. காலநிலை மாநாட்டை நடத்தும் வாய்ப்பு துருக்கி வசம்!

  • November 20, 2025
  • 0 Comments

COP31 எனப்படுகின்ற ஐ.நா. காலநிலை மாநாட்டை நடத்தும் வாய்ப்பை துருக்கி பெற்றுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்குரிய மேற்படி மாநாட்டை தமது நாட்டில் நடத்துவதற்கு ஆஸ்திரேலியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் போட்டி இட்டன. எனினும், போட்டியில் இருந்து ஆஸ்திரேலியா தற்போது விலகியுள்ளதால் மாநாட்டை நடத்தும் வாய்ப்பு துருக்கி வசமாகியுள்ளது. COP30 ஆவது மாநாடு தற்போது துருக்கியில் நடந்துவருகின்றது. இதன்போது அடுத்த மாநாடு எங்கு என்பது பற்றி முடிவெடுக்கப்படவேண்டிய நிலை இருந்தது. ஆஸ்திரேலியா மற்றும் துருக்கிக்கிடையில் இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் […]

இலங்கை

இலங்கைக்கு விமானங்களை வழங்க முக்கிய இரு நாடுகள் இணக்கம்!

  • November 20, 2025
  • 0 Comments

2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் C130 விமானங்கள் இரண்டை இலங்கைக்கு வழங்க அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் ஒப்புக்கொண்டுள்ளன.” என்று இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இலங்கையின் பாதுகாப்பு நிலை மற்றும் எதிர்கால ஏற்பாடுகள் பற்றியும் அவர் விளக்கமளித்துள்ளார். இது பற்றி அநுர கூறியவை வருமாறு, ” பாதுகாப்பு அமைச்சென்ற வகையில், எந்தவொரு பாதுகாப்புப் படையும் நமக்கு எந்த வகையான அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் தான் […]

இலங்கை

பாடசாலை மாணவர்களிடம் அதிகரிக்கும் தீய பழக்கம் – வைத்தியர் எச்சரிக்கை!

  • November 20, 2025
  • 0 Comments

பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக பேராதனை போதனா மருத்துவமனையின் சுவாசப் பழக்க நிபுணர் டாக்டர் துமிந்த யசரத்ன தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டுப் பணியகம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், 14 அல்லது 15 வயதிலேயே அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் சிகரெட் பழக்கத்தை அனுபவிக்கத் தொடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வளவு இளம் வயதிலேயே புகைபிடித்தல் நுரையீரல் தொடர்பான நோய்களின் வளர்ச்சிக்கு […]

இந்தியா

தேசிய பாதுகாப்பு தொடர்பில் புதுடில்லியில் முக்கிய கூட்டம்!

  • November 20, 2025
  • 0 Comments

இலங்கை உட்பட ஆசியாவில் மிக முக்கிய நாடுகளின் பங்கேற்புடன் புதுடில்லியில் இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் மாநாடு நடைபெறுகின்றது. கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் உறுப்பு நாடுகளின் பங்கேற்புடன் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தலைமையில் இக்கூட்டம் இடம்பெறுகின்றது. இலங்கை, இந்தியா, மாலைதீவு, பங்களாதேஸ் மற்றும் மொறிசியஸ் ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். இக்கூட்டத்துக்கு மலேசியா விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு தொடர்பான முக்கிய விடயங்களில் உறுப்பு நாடுகளுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பை […]

இலங்கை

என்.பி.பி. அரசுக்கு எதிரான முதல் “அரசியல் தாக்குதல்” நாளை: தெற்கு அரசியலில் பெரும் பரபரப்பு!

  • November 20, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக சில எதிர்க்கட்சிகள் இணைந்து முன்னெடுக்கவுள்ள பேரணி கூட்டம் நாளை (21) நுகேகொடையில் இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ள நிலையில், நாட்டில் பல பகுதிகளில் உள்ளவர்கள் நுகேகொடை அழைத்துவரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஓராண்டு கடந்துள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியே இப்போராட்டம் நடத்தப்படுகின்றது என்று ஏற்பாட்டாளர்கள் விளக்கமளித்துள்ளனர். அத்துடன், […]

error: Content is protected !!