உலகம்

நேபாளத்தில் வெடித்த மோதல் – ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

  • November 20, 2025
  • 0 Comments

நேபாளத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்கள் நடத்திய பேரணி மோதலில் முடிந்துள்ளது. இந்நிலையில் மோதலை கட்டுக்குள் கொண்டுவர இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தலைநகர் காத்மாண்டுவின் தெற்கே உள்ள  பாரா (Bara) மாவட்டத்தில் உள்ள சிமாரா நகரில் (Simara)  நேற்றைய தினம் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது  கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்களுக்கும், இளம் தலைமுறை போராட்டக்கார்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வன்முறையை […]

இலங்கை

தம்பலகாமத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்த நடத்துனர் பலி!

  • November 20, 2025
  • 0 Comments

திருகோணமலை- தம்பலகாமம், பாலம்பட்டாறு பகுதியில் பேருந்து நடத்துனர் பேருந்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (20) காலை இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் திருகோணமலை 05ம் கட்டை பகுதியில் வசித்து வரும் லலித்குமார் (43வயது) என்பவர் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, திருகோணமலையிலிருந்து கந்தளாய் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தின் நடத்துனர் பாலம்பட்டாறு பகுதியிலுள்ள கோயில் உண்டியலுக்கு காசி போடுவதற்காக பேருந்தில் இருந்து இறங்கி […]

உலகம் செய்தி

ஐ.நாவின் குற்றச்சாட்டு – இஸ்ரேலின் முக்கிய அதிகாரிகள் மீது வழக்கு தாக்கல்!

  • November 20, 2025
  • 0 Comments

இஸ்ரேல் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாக ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) குற்றம் சாட்டியுள்ளது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் துல்கரேம் (Tulkarem), நூர் ஷாம்ஸ் (Nur Shams) மற்றும் ஜெனின் (Jenin) ஆகிய மூன்று அகதி முகாம்களில் இருந்து 32,000 பாலஸ்தீனியர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) குற்றம் சாட்டியுள்ளது இந்நிலையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) , நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் (Bezalel […]

இலங்கை செய்தி

அம்மாவின் நகையை திருடிய மகன் கைது! நீதிமன்றில் வைத்து தப்பியோட்டம்!!

  • November 20, 2025
  • 0 Comments

அம்மாவின் நகையை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இன்று (20) மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட கைதி ஒருவர் தப்பியோடி தலைமறைவாகியுள்ளதாக தெரிய வருகின்றது. மூதூர் பொலிஸ் நிலையத்தில் தாய் ஒருவரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மூதூர் ஆலிம்நகரைச் சேர்ந்த 22 வயதுடைய அவரது மகன் மூதூர் பொலிஸாரினால் நேற்றையதினம் (19) கைது செய்யப்பட்டு இன்றையதினம் (20) மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது அவரை வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு   நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதன் பின்னர் […]

உலகம்

போயிங் MH370 விமானம் தீப்பிடித்து எரிவதை நேரில் பார்த்ததாக கூறும் நபர்!

  • November 20, 2025
  • 0 Comments

போயிங் 777, MH370 விமானம் மாயமானது தொடர்பான மர்மம் நீடித்து வருகின்ற நிலையில், அவ் விமானம் எரிவதை  நேரில் கண்டதாக நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குப் பயணித்தபோது மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் மாயமானது. விமானத்தை கண்டுப்பிடிப்பது சவலாகவே உள்ளது. விபத்துக்குள்ளானமைக்கான சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில் நியூசிலாந்து எண்ணெய் சுரங்கத் தொழிலாளி மைக் மெக்கே (Mike McKay) என்பவர், வியட்நாமின் கடற்கரையில் உள்ள சோங்கா மெர்கூர் எண்ணெய் சுரங்கத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது அவ் விமானம் […]

ஐரோப்பா

மென்செஸ்டரின் (Manchester) பிரதான சாலையில் விபத்து – போக்குவரத்து பாதிப்பு!

  • November 20, 2025
  • 0 Comments

மென்செஸ்டரின் (Manchester) பிரதான சாலையில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை இடம்பெற்ற குறித்த விபத்தால்  M60 பாதையில் சாரதிகள் நீண்ட தாமதத்தை எதிர்நோக்கியுள்ளனர். குறித்த பாதையில் வாகனங்கள் மெதுவாக பயணிப்பதால் மக்கள் தாமதங்களை சந்திக்க நேரிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

இளங்குமரனின் உரையால் சபையில் கடுப்பான அர்ச்சுனா!

  • November 20, 2025
  • 0 Comments

கெமராவுக்கு முன்னால் வீரசனம் பேசுபவர், கெமராவுக்கு பின்னால் தமிழர்களை கொன்றொழித்தவர்களுடன் கூட்டு சேர்ந்து செயற்படுகின்றனர்.” என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “நாம் மக்களுக்கான அரசியல் செய்கின்றோம். சிலர் ஊடகங்களுக்காக அரசியல் செய்கின்றனர். அந்நபருக்கு ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற தமிழ் கலாசாரத்தைக்கூட பின்பற்ற தெரியாதுள்ளது.” எனவும் இளங்குமரன் எம்.பி. குறிப்பிட்டார். இளங்குமரன் எம்.பி. தனது உரையின்போது சிலர் தொடர்பில் […]

ஐரோப்பா செய்தி

சொந்த நாடுகளுக்கு திரும்ப விரும்பும் புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியா வழங்கும் சலுகை!

  • November 20, 2025
  • 0 Comments

பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிக்கப்படும் என உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) தெரிவித்துள்ளார். தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்ல விரும்புகின்றவர்களுக்கு £3,000 வழங்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த தொகை அதிகரிக்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இங்கிலாந்தில் தஞ்சம் கோரும் புலம்பெயர்ந்தோரைத் தடுக்கவும், தஞ்சம் கோரியவர்கள் தாமாக முன்வந்து தங்கள் சொந்த நாட்டிற்கு செல்வதற்கும் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood)  கையில் எடுத்துள்ள இந்த திட்டத்தை தொழிற்கட்சியின் […]

இலங்கை செய்தி

அதிகரிக்கும் சைபர் குற்றங்கள் – டிஐஜியை நியமிக்க தீர்மானம்!

  • November 20, 2025
  • 0 Comments

சைபர் குற்றங்கள் தொடர்பாக  சுமார் 25 முறைப்பாடுகள் தினமும் பதிவாகுவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான குழுநிலை விவாதத்தில் இன்று (20)  பங்கேற்று உரையாற்றும் போது அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், பெரும்பாலான முறைப்பாடுகள் வடக்கு மாகாணத்தில் இருந்து பதிவாகுவதாக தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் 24 சைபர் குற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன […]

இலங்கை

சபாநாயகரின் அறைக்குள் நுழைந்த பாம்பு – பாதுகாப்பு கோரும் சஜித்!

  • November 20, 2025
  • 0 Comments

நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பாம்புகளிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் அறைக்குள் ஒரு பாம்பு நுழைந்ததாகக் கேள்விப்பட்டதாகவும், நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பாம்புகளிடமிருந்து சபாநாயகரையும் எம்.பி.க்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றமானது சுற்றுச்சூழல் உணர்திறன் வலயத்தில் அமைந்துள்ளதால், பாம்புகள்  நுழைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!