உலகம்

தென்கொரியாவில் பாறையில் மோதி விபத்துக்குள்ளான கப்பல் !

  • November 19, 2025
  • 0 Comments

தென்கொரியாவில் ஏறக்குறைய 270 பேரை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று பாறைகளில் மோதி இன்று விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது. கப்பல் நாட்டின் தெற்கு தீவான ஜெஜுவிலிருந்து (Jeju) தென்மேற்கு துறைமுக நகரமான மோக்போவுக்குப் (Mokpo) பயணித்த கப்பலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக  கடலோர காவல்படையினர்  அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர். கப்பலில் இருந்தவர்களை மீட்க அனைத்து வசதிகளையும் திரட்டி வருவதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

உலகம்

காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்து – 64 பேர் மாயம்!

  • November 19, 2025
  • 0 Comments

காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 64 பேர் காணாமல் போனதாக அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர். கசாய் (Kasai) மாகாணத்தில் உள்ள சங்குரு (Sankuru) ஆற்றின் முகத்துவாரத்தில் கடந்த திங்கட்கிழமை  இந்த விபத்து  நிகழ்ந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். படகில் 120 பேர் இருந்ததாகவும், அவர்களில் 54 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 64 பேர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாட்டில் மலிவான அல்லது தரம் குறைந்த படகுகளை […]

பொழுதுபோக்கு

பதறிப்போன நடிகை மான்யா ஆனந்த்…. என்ன செய்தார் தெரியுமா?

  • November 19, 2025
  • 0 Comments

சின்னத்திரை நடிகையான மான்யா ஆனந்த் கூறிய தகவல் தான் தற்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய பேட்டி தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டது என்பதை கவனித்த மான்யா ஆனந்த், உடனே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு நீண்ட விளக்கத்தை கொடுத்துள்ளார். அதில், “என்னைப் பற்றிய பேட்டியைத் தொடர்ந்து சில சேனல்கள் தனுஷ் சாரை குறைசொல்லும் விதமாக போலித் தகவல்களை பரப்பு வருகிறார்கள். நான் பேட்டியில் தெளிவாக ‘என்னை தொடர்பு கொண்ட நபர் ஒரு போலி நபராக இருக்கலாம்’ என்று சொல்லியிருந்தேன். […]

இலங்கை செய்தி

ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும்!

  • November 19, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, 16.6 மில்லியன் ரூபாய் அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பான விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று சட்டமா அதிபர்  கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரவிடம் தெரிவித்தார். அதன் பின்னர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் நேற்று அறிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ​​சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான கூடுதல் […]

உலகம்

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை – மக்களுக்கு எச்சரிக்கை!

  • November 19, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவின் செமேரு (Semeru) எரிமலை இன்று வெடித்து சிதறியுள்ளது. இதனால் 54,000 அடி உயர சாம்பல் காற்றில் கலந்துள்ள நிலையில், மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார அபாயங்களைத் தவிர்க்க எரிமலையிலிருந்து  தூர இடைவெளியை பராமரிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்தோனேசியாவில் செயலில் உள்ள எரிமலைகளில் செமேரு (Semeru) எரிமலையும் ஒன்றாகும்.

பொழுதுபோக்கு

விண்ணைத்தாண்டி வருவாயா காட்சிகளை பயன்படுத்த தடை

  • November 19, 2025
  • 0 Comments

விண்ணைத்தாண்டி வருவாயா  படத்தின் காட்சிகள் மற்றும் பின்னணி இசை ஆகியவற்றை சமீபத்தில் வெளியான “ஆரோமலே” படத்தில் பயன்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் டி.ராஜீவ் உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்கள் நிறுவனம் தயாரித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் காட்சிகள் மற்றும் இசையைப் பயன்படுத்துவது காப்புரிமை சட்டத்திற்கு முரணானது என்பதால், அவற்றைப் பயன்படுத்துவதற்கு மினி ஸ்டுடியோ […]

ஐரோப்பா

மாறும் வானிலை – பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை!

  • November 19, 2025
  • 0 Comments

பிரித்தானியா  முழுவதும் குளிர்காலநிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் (Wales)மற்றும் ஸ்காட்லாந்தின் (Scotland)  சில பகுதிகளில் 7 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. வடக்கு அயர்லாந்து ( Northern Ireland), வேல்ஸின் (Wales)  சில பகுதிகள், வடக்கு மற்றும் தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தின்  (Scotland) பெரும்பகுதிக்கு பனிப்பொழிவுக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், வடகிழக்கு இங்கிலாந்திற்கு  அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தின் உயரமான பகுதிகளில் 15-20 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு பதிவாகக்கூடும் என்றும் […]

இலங்கை

பழைய முறைமையில் தேர்தலை நடத்த தமிழரசுக் கட்சியும் பச்சைக்கொடி!

  • November 19, 2025
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறு இலங்கை தமிழரசுக் கட்சி வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் இந்த வலியுறுத்தலை விடுத்தார். “ மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு 5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. எமது நாட்டு அரசமைப்பில் மாகாணசபை முறைமை உள்ளது. அதனை அமுல்படுத்துவதற்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.” எனவும் சத்தியலிங்கம் குறிப்பிட்டார். அதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் […]

ஐரோப்பா செய்தி

சட்டவிரோத இடப்பெயர்வை கட்டுப்படுத்த சர்ச்சைக்குரிய நடவடிக்கையை கையில் எடுத்த பிரான்ஸ்!

  • November 19, 2025
  • 0 Comments

ஆங்கிலக் கால்வாயை கடக்கும் சட்டவிரோத குடியேறிகளை கட்டுப்படுத்துவதற்காக பிரான்ஸ் கைது வலைகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. 30 மீட்டர் அகலம் கொண்ட இந்த வலைகள், படகு ஓட்டுநர்களைத் தடுக்கவும், அவற்றின் பாதையை சீர்குலைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக பிரெஞ்சு காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் பீதியை ஏற்படுத்தக்கூடும் என்பதுடன் உயிரிழப்புகளுக்கும் வழிவகுக்கும் எனவும்  பிரெஞ்சு கடலோரக் காவல்படையினரும் தொழிற்சங்கங்களும் எச்சரித்துள்ளன. அத்துடன் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளால் அதிகாரிகள் குற்றவியல் வழக்குகளில் சிக்குவதற்கான வாய்ப்பிருப்பதாகவும் வழக்குறைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறாயினும் சட்டவிரோத இடப் பெயர்வை […]

இலங்கை

திருமலை சம்பவம்: பொலிஸாரை இடைநீக்கம் செய்யுமாறு வலியுறுத்து!

  • November 19, 2025
  • 0 Comments

திருகோணமலை சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்துவிட்டே, அச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ. அலவத்துவல மேலும் கூறியவை வருமாறு, நான் இனவாதி அல்லன். எனினும், திருகோணமலை சம்பவம் பற்றி குறிப்பிட்டாக வேண்டும். சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் அறிக்கை கோரப்படும் என ஜனாதிபதி நேற்று கூறி இருந்தார். […]

error: Content is protected !!