இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் “டிட்வா” புயலின் கோரத்தாண்டவம் : 56 பேர் மரணம்

  • November 28, 2025
  • 0 Comments

இலங்கையில் உருவாகியுள்ள டிட்வா புயல் தற்போது தனது கோரத்தாண்டவத்தை ஆரம்பித்துள்ளது. தற்போது இந்த புயல் வாழைச்சேனைக்கும் பொலன்னறுவைக்கும் இடையில் மையம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை முழுதும் ஏற்பட்டுள்ள அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 21 பேர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 12,313 குடும்பங்களை சேர்ந்த 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தொடர்ந்து பெய்து வரும் […]

பொழுதுபோக்கு

“உடனடியாக நீக்க வேண்டும்” டியூட் படக்குழுவுக்கு அதிரடி உத்தரவு

  • November 28, 2025
  • 0 Comments

இயக்குனராக முதல் படத்திலேயே வெற்றி கண்டு தற்போது நடிகராகவும் வெற்றிப்பாதையில் செல்கின்றார் பிரதீப் ரங்கநாதன். இவர் நடிப்பில் இதுவரை வெளியான மூன்று படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளன. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் டியூட். இப்படத்தை கீர்த்தீஸ்வரன் என்கிற இளம் இயக்குநர் இயக்கி இருந்தார். அப்படத்தில் இளையராஜாவின் இசையில் உருவான பிளாக்பஸ்டர் ஹிட் பாடல்களான நூறு வருஷம் பாடல் மற்றும் கருத்தமச்சான் பாடல் ஆகியவை இடம்பெற்று இருந்தன. […]

பொழுதுபோக்கு

ஆஸ்கர் 2026 போட்டியில் குதித்த மஹாவதார் நரசிம்மா

  • November 28, 2025
  • 0 Comments

2026ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில் சிறந்த அனிமேஷன் திரைப்படப் பிரிவில் பரிசீலனையில் உள்ள 35 அனிமேஷன் திரைப்படங்களின் பட்டியலை அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவின் புராண அனிமேஷன் திரைப்படமான ‘மஹாவதார் நரசிம்மா’, 98வது அகாடமி விருதுகளில் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் பந்தயத்தில் நுழைந்து உலக அரங்கில் முத்திரை பதித்துள்ளது. அஸ்வின் குமார் இயக்கி, ஷில்பா தவான் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் பேனரின் கீழ் தயாரித்துள்ள மஹாவதார் நரசிம்மரின் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் மாவீரர் நாள் – இனப்படுகொலைக்கு நீதி கோருகின்றனர்

  • November 27, 2025
  • 0 Comments

மாவீரர் நாள் இன்று இலங்கையிலும் உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்கள் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கின்றனர். பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, இந்தியா உட்பட பல்வேறு ஐரோப்பிய ஆசிய நாடுகளில் மாவீரர் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் மாவீரர் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. மாவீரர் நாளை அனுஷ்டிக்க இலங்கையின் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனுமதிக்க முடியாதென திட்டவட்டமாக நிராகரித்திருந்தது. என்றாலும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அரசாங்கம் போரில் […]

பொழுதுபோக்கு

சுந்தர் சி விலகியது ஏன்? லதா ரஜினிகாந்த் ஓபன் டாக்

  • November 27, 2025
  • 0 Comments

சுந்தர்.சி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் பற்றிய தகவல் வெளிவந்து சில நாட்களுக்குள் சுந்தர் சி திடீரென இப்படத்திலிருந்து விலகினார். இது தொடர்பாக லதா ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறிய விடயம் தான் தற்போது ஹைலைட். “அது அவருடைய தொழில் சம்பந்தப்பட்ட விஷயம். அதைப் பற்றி நான் கூற விரும்பவில்லை” என்றார். கோவாவில் நடை பெறும் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் […]

இலங்கை

இலங்கையில் தரையிறங்க முடியாத நிலை! விமானங்களை திருப்பிவிட தீர்மானம்!

  • November 27, 2025
  • 0 Comments

நாட்டை பாதிக்கும் கடுமையான வானிலை காரணமாக கட்டுநாயக்காவில் தரையிறங்க முடியாத விமானங்களை இந்திய விமான நிலையங்களுக்கு திருப்பிவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த விமானங்கள் திருவனந்தபுரம் மற்றும் கொச்சினுக்கு திருப்பிவிட தீர்மானிக்கப்பட்டள்ளதாக  துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை செய்தி

பேரிடர் சூழல் : 01 மில்லியன் இழப்பீடு அறிவிப்பு – பட்ஜெட் மீதான குழுநிலை விவாதம் ஒத்திவைப்பு!

  • November 27, 2025
  • 0 Comments

கனமழையால் ஏற்பட்ட  பேரிடர் சூழ்நிலையால் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் தலா 1 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி நிதியத்திற்கு அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) இதனை அறிவித்துள்ளது. இதன்படி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பணம் விரைவாக வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி நிதியம் ஏற்கனவே செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை பேரிடர் சூழ்நிலை காரணமாக வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதம் நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறாது என […]

ஐரோப்பா

உக்ரைனுக்காக பணியாற்றிய 08 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய ரஷ்யா!

  • November 27, 2025
  • 0 Comments

ரஷ்யா – உக்ரைன் போரில் கிரிமியா (Crimea) பாலத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட 08 பேர் பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றம் இன்று அவர்களுக்கு தீர்ப்பளித்துள்ளது. குறித்த 08 பேரும் குற்றவாளிகளாக கருதப்பட்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு உக்ரைனின் SBU என அழைக்கப்படும் பாதுகாப்பு சேவை இந்த தாக்குதலை முன்னெடுத்தது. அப்போது இந்த குற்றச்சாட்டின் கீழ் ரஷ்ய, உக்ரைனிய மற்றும் ஆர்மீனிய குடிமக்கள் உட்பட எட்டு […]

இலங்கை செய்தி

முல்லைத்தீவில் சீரற்ற காலநிலையால் மரம் சரிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு

  • November 27, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு நகரின் வீதியின் குறுக்கே வீழ்ந்த புளியமரம் சரிந்து விழுந்ததில் வீதி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டிருந்த சம்பவம் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று (27) காலை முல்லைத்தீவு நகரில், செலான் வங்கியின் முன்பாக உள்ள வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் வீதியில் ஒரு புளியமரம் சரிந்து விழுந்துள்ளது. இதனால். குறித்த இடத்தில் வீதிப்போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டிருந்தது. இவற்றை விரைந்து அகற்றும் பணியில் வீதி அபிவிருத்தித் […]

Maaveerar, மாவீரர்கள், Great Heroes, Tributes, Anjali, அஞ்சலி, Remembrance, Respect செய்தி

புதுக்குடியிருப்பில் முழுமையான கதவடைப்பு – மாவீரர்களுக்கு மரியாதையுடன் அஞ்சலி

  • November 27, 2025
  • 0 Comments

தமிழீழ தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு, புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் அழைப்பின்படி இன்று (27.11.2025) புதுக்குடியிருப்பு நகரமெங்கும் முழுமையான கதவடைப்பு மேற்கொள்ளப்பட்டு, மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. காலை வேளையில் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத் தலைவர் த. நவநீதன் தலைமையில் நகரின் பொது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, பூ தூவி அஞ்சலியினை செலுத்தினர். இதனுடன், வர்த்தக சங்க உறுப்பினர்கள்,  வர்த்தகர்கள், பொதுமக்கள் எனப் பலர் இணைந்து மாவீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்தனர். வருடந்தோறும் வழமையாக […]

error: Content is protected !!