இந்தியா

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் காலமானார்

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் செவ்வாய்க்கிழமை தனது 79 வயதில் நீண்டகால உடல்நலக் குறைவால் காலமானார். புது தில்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மதியம் 1 மணியளவில் அவர் காலமானார். அவரது மறைவுச் செய்தியை அவரது உதவியாளர் கன்வர் சிங் ராணா உறுதிப்படுத்தினார். மாலிக் மே 2025 முதல் டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவரது உடல்நிலை மோசமாகவே இருந்தது. அவர் […]

பொழுதுபோக்கு

இலங்கைத் தமிழர்களை தரக்குறைவாக விமர்சிக்கும் விஜய் தேவரகொண்டாவின் கிங்டம்

  • August 5, 2025
  • 0 Comments

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி கடந்த ஜூலை 31ஆம் தேதி வெளியான படம் கிங்டம். படம் அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளுடன் இருப்பதாக படம் பார்த்த பலரும் விமர்சனம் செய்து வந்தனர். இது மட்டும் இல்லாமல் படத்தின் கதைக்களம் இலங்கையாக இருப்பதால், பலரும் படம் இலங்கைத் தமிழர்களின் போரை கொச்சைப் படுத்தும் விதமாக இருப்பதாகவும், இலங்கைத் தமிழர்களை தரக்குறைவாக விமர்சிப்பது போலவும் இருப்பதாக இணையத்தில் கருத்து தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஜெகன் தியேட்டரை […]

பொழுதுபோக்கு

நடிகை மீரா மிதுனை கைது செய்ய உத்தரவு

  • August 5, 2025
  • 0 Comments

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் 3 ஆண்டுகளால் தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுனை கைது செய்ய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிடிவாரண்ட் பிறப்பித்து 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வரும் மீரா மிதுனை கைது செய்து ஆகஸ்ட் 11ம் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

உலகம்

மத்திய மெக்சிகோவில் கண்டெடுக்கப்பட்ட 32 உடல்கள் – தீவிர விசாரணையில் அதிகாரிகள்!

  • August 5, 2025
  • 0 Comments

மத்திய மெக்சிகன் மாநிலமான குவானாஜுவாடோவில் Irapuato  என்ற பகுதியில் 32 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெக்சிகோ நகரத்திலிருந்து வடமேற்கே சுமார் 320 கிலோமீட்டர் தொலைவில் இந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜூலை 30 முதல் தடயவியல் குழுக்கள் அந்த இடத்தில் பணியாற்றி வருவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். மீதமுள்ள உடல்களை அடையாளம் காண அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இராபுவாடோவில் ஒரு தெரு விருந்தில் நடந்த ஒரு பெரிய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்ட இரண்டு மாதங்களுக்கு […]

இலங்கை

திருகோணமலை நிலத்தடி கடற்படை சித்திரவதை முகாம் தொடர்பில் விசாரணையில் வெளியான தகவல்

  கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்த திருகோணமலை நிலத்தடி கடற்படை சித்திரவதை முகாமில் 40 முதல் 60 வரையிலான நபர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடயத்தை முன்னாள் கடற்படைத் தலைவர் ஒருவர் அறிந்திருந்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வெளிப்படுத்தியுள்ளது. ஜூலை 28ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு ஜூலை 30 வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் (ஓய்வுபெற்ற) தமித் நிஷாந்த சிறிசோம […]

பொழுதுபோக்கு

வார் 2 படத்துக்கு மரண பயத்தை காட்டிய கூலி – அமெரிக்காவில் நடந்த சம்பவம்

  • August 5, 2025
  • 0 Comments

லோகேஷ் கனகராஜும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். இந்த நிலையில், கூலி மற்றும் வார் 2 படங்களின் அமெரிக்க முன்பதிவு நிலவரம் வெளியாகி இருக்கிறது. ரஜினிகாந்த் நடித்த கூலி படத்துக்கு போட்டியாக ஆகஸ்ட் 14ந் தேதி வார் 2 என்கிற பான் இந்தியா படமும் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் […]

ஐரோப்பா

டென்மார்கில் விலங்குகளுக்கு உணவளிக்க செல்லப்பிராணிகளை நன்கொடையாக கேக்கும் மிருகக்காட்சிசாலை!

  • August 5, 2025
  • 0 Comments

டென்மார்க் மிருகக்காட்சிசாலை ஒன்று, பொதுமக்கள் தங்கள் செல்லப்பிராணிகளை – குறிப்பாக கோழிகள், முயல்கள் மற்றும் கினிப் பன்றிகளை நன்கொடையாக வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. மிருகக்சாட்சிசாலையில் உள்ள விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக இந்த நன்கொடை கோரப்பட்டுள்ளது. “விலங்கு காப்பகத்தில், விலங்குகளின் இயற்கை உணவுச் சங்கிலியைப் பின்பற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது எனவும் விலங்கு நலன் மற்றும் தொழில்முறை ஒருமைப்பாடு ஆகிய இரண்டின் அடிப்படையில் நன்கொடை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. மிருகக்காட்சிசாலை குதிரைகள் போன்ற பெரிய விலங்குகளை ஏற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளதுடன், […]

ஐரோப்பா

ஏவுகணை தடையிலிருந்து மாஸ்கோ விலகிய பிறகு மேலும் நடவடிக்கைகள் குறித்து மெட்வெடேவ் எச்சரிக்கை

  • August 5, 2025
  • 0 Comments

குறுகிய மற்றும் நடுத்தர தூர அணு ஏவுகணைகள் மீதான தடையிலிருந்து மாஸ்கோ விலகியதற்கு நேட்டோ நாடுகளை ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ் திங்களன்று குற்றம் சாட்டினார். நடுத்தர மற்றும் குறுகிய தூர ஏவுகணைகளை நிலைநிறுத்துவதற்கான தடையை வாபஸ் பெறுவது குறித்த ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை, நேட்டோ நாடுகளின் ரஷ்ய எதிர்ப்புக் கொள்கையின் விளைவாகும். இது நமது அனைத்து எதிரிகளும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு புதிய யதார்த்தம். மேலும் நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம் என்று ரஷ்ய […]

வட அமெரிக்கா

இந்தியாவை மீண்டும் சீண்டும் ட்ரம்ப் – வரி விதிப்பை அதிகரிக்கபோவதாக மிரட்டல்!

  • August 5, 2025
  • 0 Comments

அமெரிக்கா- இந்தியா இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவில்லை. இதனால் 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்தார். அத்துடன் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என எச்சரித்தது. ஆனால்  ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை. அதற்கு மாறாக  இந்தியா ரஷியாவிடம் இருந்து  அதிக அளவில் கச்சாய் எண்ணெய் கொள்வனவு செய்வதோடு, அதனை அதிக லாபத்திற்கு ஓபன் மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. ரஷியா தாக்குதலில் உக்ரைனில் எவ்வளவு மக்கள் இறந்து […]

இலங்கை

இலங்கையில் மனைவியை கொலை செய்த கணவருக்கு மரண தண்டனை விதிப்பு!

  • August 5, 2025
  • 0 Comments

மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கணவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.எம். அப்துல்லாஹ் இன்று (05) திறந்த நீதிமன்றில் இந்த தீர்ப்பை வாசித்து காட்டினார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி கந்தளாய் பகுதியில் தனது மனைவியான முஹம்மது பௌஸ் ரஷ்மியா (29வயது) என்பவரை கூறிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக கணவர் (சுபியான் இன்சான் 38வயது) மீது […]

error: Content is protected !!