இலங்கை செய்தி

இலங்கையில் அதிர்ச்சி – மகனை அடித்துக் கொலை செய்த தந்தை

  • September 20, 2025
  • 0 Comments

தேவலேகம பொலிஸ் பிரிவின் பட்டுவத்தே பகுதியில் நேற்று தனது மகனை அடித்துக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். மனைவி மற்றும் மகனைத் தாக்கிய நிலையில் மகனைக் கொன்றதாக தேவலேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த மனைவி கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் படுவத்தே, ஹலமட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவராகும். குடும்ப தகராறு காரணமாக, தடியால் அடித்து இந்தக் கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் குறித்து நீதவான் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஜெமினி நனோ பனானாவை பயன்படுத்தும் மக்களுக்கு எச்சரிக்கை

  • September 20, 2025
  • 0 Comments

சமீப காலத்தில் செயற்கை நுண்ணறிவு உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறுகிய ஒவ்வொரு காலப்பகுதியிலும் ட்ரெண்ட் எனப்படும் நவீன சொல்லின் பயன்பாட்டை இணையவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி அண்மைய நாட்களில் ஜெமினி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் புகைப்படங்களை ஒவ்வொருவருக்கும் ஏற்றாற் போல் மாற்றியமைக்கும் ஒரு வகை ட்ரெண்ட் ஆரம்பித்துள்ளது. இந்த தொழில்நுட்பங்கள் குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும் இணையவாசிகளின் ஆர்வம் என்பது குறைந்ததாகத் தெரியவில்லை. நானோ பனானா எனப்படும் ஜெமினியின் புகைப்பட எடிட்டிங் கருவி […]

விளையாட்டு

பாகிஸ்தான் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்குமாறு கோரிக்கை

  • September 20, 2025
  • 0 Comments

ஆசிய கோப்பை 2025 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணியுடன் செப்டம்பர் 21, 2025 அன்று துபாயில் மோதவுள்ளது. இந்த முக்கியமான சூப்பர் 4 போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கும். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு செப்டம்பர் 19-ல் ஓமன் அணிக்கு எதிரான லீக் போட்டி மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 முதல் […]

இலங்கை

தந்தையின் ஆசையை நிறைவேற்ற மீண்டும் அணியுடன் இணைந்த துனித் வெல்லாலகே

  • September 20, 2025
  • 0 Comments

தந்தையின் மறைவு காரணமாக இலங்கை வந்த கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகே, இறுதி மரியாதை செலுத்திய பின்னர், மீண்டும் டுபாய் சென்றுள்ளார். டுபாயில் நடைபெறும் ஆசிய கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க இன்று அதிகாலையில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய்க்கு புறப்பட்டதாக விமான நிலையப் பொறுப்பாளர் தெரிவித்தார். அவர் இன்று அதிகாலை 03.05 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் EK – 649 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு புறப்பட்டார். “தனது தந்தையின் ஒரே ஆசை, தான் […]

இலங்கை

இலங்கையின் இன்றைய காலநிலை தொடர்பில் வெளியான தகவல்

  • September 20, 2025
  • 0 Comments

மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி,கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் ஓரளவு பலத்த […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

பெண்கள் புத்தகம் எழுதுவதற்கும் ஆப்கானிஸ்தானில் தடை

  • September 20, 2025
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் அரசாங்கம் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கும் பெண்கள் எழுதிய புத்தகங்களைத் தடை செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி, “ஷரியா எதிர்ப்பு மற்றும் தாலிபான் கொள்கைகள்” என்ற கருப்பொருளுடன் தொடர்புடைய 680 புத்தகங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. அவற்றில், “வேதியியல் ஆய்வகத்தில் பாதுகாப்பு” போன்ற தலைப்புகளைக் கொண்ட சுமார் 140 புத்தகங்களும் இந்தத் தடையில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், இந்த வாரம் மட்டும், தாலிபானின் உச்ச தலைவரின் உத்தரவின் பேரில் சுமார் 10 மாகாணங்களில் பைபர் ஆப்டிக் இணையம் தடை […]

ஐரோப்பா செய்தி

ஏகாதிபத்திய வழிமுறையை திணிக்கும் புட்டின் – பிரித்தானிய உளவுத்துறை தலைவர் அதிர்ச்சி தகவல்

  • September 20, 2025
  • 0 Comments

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர புட்டின் விரும்பவில்லை என பிரித்தானிய உளவுத்துறை தலைவர் ரிச்சர்ட் மோரி தெரிவித்துள்ளார். இம்மாத இறுதியில் பணி ஓய்வு பெறும் பிரித்தானிய உளவுத்துறை அமைப்பின் தலைவர் ரிச்சர்ட் மோரி இவ்வாறான சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் நேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரிச்சர்ட் மோரி பங்கேற்றார். கழ்ச்சியில் அவர் பேசியதாவது; உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி புட்டின் விரும்பவில்லை. […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் அவசர அழைப்புகளுக்கு பதிலளிக்க முடியாமல் போனதால் மூவர் பலி

  • September 20, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் triple-0 என்ற அவசர அழைப்புகளுக்கு பதிலளிக்க முடியாமல் போனதால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். Optus வலையமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. Optus தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் ரூ ஒரு புதுப்பிப்பின் போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறுகிறார். தெற்கு ஆஸ்திரேலியா, வடக்குப் பிரதேசம் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் அழைப்புகள் தடைபட்டுள்ளன. தெற்கு ஆஸ்திரேலியாவில் இரண்டு பேரும் மேற்கு ஆஸ்திரேலியாவில் ஒருவரும் இறந்துள்ளனர். Optusஇன் ஆரம்ப விசாரணையில் கிட்டத்தட்ட 600 […]

உலகம் செய்தி

அதிநவீன ட்ரோன்கள் சோதனை – முடிவுகளை பார்த்து மகிழ்ச்சியடைந்த வடகொரியா ஜனாதிபதி

  • September 20, 2025
  • 0 Comments

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ட்ரோன்களின் சோதனையை வடகொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உன், நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அரசுத் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. கும்சோங் வகை தாக்குதல் ட்ரோன்கள் மற்றும் உளவு ட்ரோன்களின் சோதனை முடிவுகளில் ஜனாதிபதி கிம் திருப்தி அடைந்துள்ளார். மேலும் ஆளில்லா வான்வழி ட்ரோன்களின் திறன்களை செயற்கை நுண்ணறிவு மூலம் மேலும் வலுப்படுத்த உத்தரவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்தி வட அமெரிக்கா

இஸ்ரேலுக்கு 6 பில்லியன் டாலர் ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா திட்டம்

  • September 19, 2025
  • 0 Comments

இஸ்ரேலுக்கு கிட்டத்தட்ட 6 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்கத் திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது அமெரிக்க நட்பு நாடான இஸ்ரேலுக்கு ஆதரவின் புதிய எழுச்சியாகும். இதில் 30 AH-64 அப்பாச்சி ஹெலிகாப்டர்களுக்கான $3.8 பில்லியன் விற்பனையும், இஸ்ரேலின் தற்போதைய இருப்புக்களை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்குவதும், இஸ்ரேலிய இராணுவத்திற்கான 3,200 காலாட்படை தாக்குதல் வாகனங்களுக்கான இரண்டாவது $1.9 பில்லியன் விற்பனையும் அடங்கும். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாலும், […]

error: Content is protected !!