உக்ரைன் முழுவதும் 600இற்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய ரஷ்யா!
உக்ரைன் முழுவதும் 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சப்சான் தந்திரோபாய ஏவுகணை அமைப்பு, பல்நோக்கு தாக்குதல் மற்றும் உளவு ட்ரோன்கள், ரோபோடிக் போர் வாகனங்களை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. “தாக்குதலின் நோக்கங்கள் அடையப்பட்டன” என்றும் “அனைத்து நியமிக்கப்பட்ட இலக்குகளும் தாக்கப்பட்டன” என்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இந்நிலையில் தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்ட உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குறைந்தது மூன்று பேர் […]













