இலங்கை

இலங்கையில் அதிக வரிச்சுமை – 60% குறைந்த வருமானம்

அதிக வரிச்சுமை காரணமாக நாட்டில் குடும்பங்களின் வருமானம் 60% குறைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வருமான மட்டம் 60 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளை, செலவு மட்டம் 90 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், பொருளாதார நெருக்கடி காரணமாக 22 வீதமானோர் கடனில் தவிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் நாட்டு மக்களின் வருமானம் 3.4 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சக்வலயில் சௌகரியமான வகுப்பறைகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஹபரணை மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான சௌகரியமான வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கம் தன்னிச்சையாக வரிச்சுமையை அதிகரிப்பதன் காரணமாகவே நாடு இந்த நிலைக்கு வந்துள்ளதாகவும் திருடர்களிடம் ஆணை பெற்று ஜனாதிபதி எடுக்கும் இவ்வாறான தீர்மானங்களை அங்கீகரிக்க முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்