இலங்கை செய்தி

பொதுத் தேர்தலுக்குச் செல்வது என்பது ஜனாதிபதியின் மீறப்பட்ட வாக்குறுதியாகும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் வகையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய குடியரசு முன்னணியின் மாத்தறை மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே பாட்டலி சம்பிக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது விவாதிக்கப்பட்டு வரும் நாடாளுமன்றத்தை கலைக்கும் நடவடிக்கையில் எந்த பிரச்சனையும் இல்லையென்றாலும், ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்து பொது தேர்தலுக்கு செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது ஜனாதிபதியை நியமித்த போது வழங்கிய வாக்குறுதிகளை மீறும் செயலாகும் எனவும் பாட்டலி சம்பிக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை