இலங்கை செய்தி

ஈஸ்டர் விசாரணையை மாநில உளவுத்துறை தவறாக வழிநடத்தியதாக முன்னாள் CID இயக்குனர் குற்றச்சாட்டு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை அரச புலனாய்வுப் பிரிவினர் தவறாக வழிநடத்தியதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரியவினால் எழுதப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய முன்னாள் சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர, 21 ஏப்ரல் 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் ஒரு பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும் என குறிப்பிட்டார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான புதிர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு வவுணதீவில் இரண்டு பொலிசார் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகளை தவறாக வழிநடத்த இராணுவ புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட முயற்சியையும் அபேசேகர நினைவு கூர்ந்தார்.

வவுணதீவு படுகொலையை விடுதலைப் புலிகளே மேற்கொண்டதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அப்போதே ஆலோசனை வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில் இரண்டு பொலிஸாரின் கொலையும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையது அல்ல, சஹரான் ஹாசிமுடன் தொடர்புடையது என்று தெரியவந்துள்ளது என்று அபேசேகர குறிப்பிட்டார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் தொடரும் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாம் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் அபேசேகர குறிப்பிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், தனது சார்பில் நீதிமன்றத்தில் இலவசமாக ஆஜராகிய சட்டத்தரணிகளுக்கு, குறிப்பாக பிரபல சட்டத்தரணி விரான் கொரியாவுக்கு நன்றி தெரிவித்தார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய நிர்வாகம் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நீதியை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் இருப்பதாக அபேசேகர தெரிவித்துள்ளார்.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை