இலங்கை செய்தி

திருகோணமலையில் மாடுகளை திருடிய குற்றச்சாட்டில் ஐவர் கைது

திருகோணமலை -தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் பேரில் ஐந்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பலகாமம் ஈச்சநகர் பகுதியிலுள்ள மாட்டு உரிமையாளரொருவர் தனது மாடுகள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 5 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகம் நபர்கள் வான்எல மற்றும் முள்ளிப்பொத்தானை பகுதிகளை சேர்ந்த 30 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் தெரிய வருகின்றது.

குறித்த சந்தேக நபர்கள் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளை இனம் கண்டு மாடுகளைப் பிடித்துக் கொண்டு வேனில் ஏற்றிச் செல்வதாகவும் பொலிஸ் விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content