இந்தியா

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு சம்பவம்; இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் இன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று பயங்கர துப்பாக்கிச் சூடு சண்டை நடந்தது.

வடக்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள பிச்நாட் மச்சில் பகுதியில் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில், ராணுவம் மற்றும் குப்வாரா பொலிஸார் இணைந்து பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.

இது குறித்து பொலிஸார் தெரிவிக்கையில்,பயங்கரவாதிகள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் உள்ள ஏவுதளம் ஒன்றிலிருந்து ஊடுருவி வருவதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

https://twitter.com/RBegum786/status/1653677539313987586/photo/2

இதனையடுத்து, போலிஸாரும், பாதுகாப்புப்படையினரும் அப்பகுதியில் ஊடுருவல் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையில், இன்று குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே என்கவுன்டர் நடைபெற்றது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், பயங்கரவாதிகளை தேடுதல் பணி இன்னும் நடந்து வருகிறது என்றார்.

(Visited 7 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content