ஆசியா

சிங்கப்பூர் கப்பலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து – ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

சிங்கப்பூரில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேற்கு சிங்கப்பூர் துறைமுகப் பகுதியில் உள்ள Seraya Buoy பகுதியில் இருந்தகப்பலே இவ்வாறு தீவிபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனை அடுத்து, ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த திங்கள்கிழமை மதியம் 1.20 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

PSA மரைன் பைலட் கப்பலின் இயந்திர அறையில் தீ பற்றியதாக PSA Marine அமைப்பு தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கில் பரவி வரும் 59 வினாடிகள் கொண்ட வீடியோவில், அந்த கப்பலில் பற்றி எரியும் தீப்பிழம்புகள் மற்றும் கறுப்பு நிற புகை மூட்டங்களையும் காண முடிந்தது.

புகையை உள்ளிழுத்த காரணத்திற்காக ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக SCDF கூறியது.

தீ விபத்துக்கான காரணத்தை விசாரித்து வருவதாக சொல்லப்பட்டுள்ளது.

(Visited 2 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content