உலகம் விளையாட்டு

மூன்றாம் நாள் முடிவில் 35 ஓட்டங்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்றுள்ளது. ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 78 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 393 ரன்கள் குவித்தது.

இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்தது. கவாஜா 126 ரன்னும், அலெக்ஸ் கேரி 52 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடக்கம் முதல் இங்கிலாந்து அணி சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதன்படி அலெக்ஸ் கேரி 66 ரன்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் வெளியேறினார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த கவாஜா 141 ரன்களில் , ராபின்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

கம்மின்ஸ் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நாதன் நியான் 1 ரன், ஸ்காட் போலண்ட் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் .

இறுதியில் 10 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி 386 ரன்களில் ஆட்டமிழந்தது. இங்கிலாந்து சார்பில் பிராட் , ராபின்சன் தலா 3 விக்கெட்டும் , மொயீன் அலி 2 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து இங்கிலாந்து அணி 7 ரன்கள் முன்னிலையுடம் 2வது இன்னிங்சை தொடங்கியது. ஆரம்பமே அந்த அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

அந்த அணியின் தொடக்க வீரர்களான பென் டுக்கெட் 19 ரன்களும், குருவ்லே 7 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனிடையே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து மழை அதிகரித்ததால் போட்டிக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன்படி நாளை 4-ஆம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

இங்கிலாந்து அணி 10.3 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் எடுத்து 35 ரன்கள் முன்னிலையுடன் நாளை ஆட்டத்தை தொடர உள்ளது.

(Visited 20 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content