ஆசியா

தென்கொரியாவில் சிறுமியைக் கத்தியால் குத்தியதை ஒப்புக்கொண்ட தொடக்கப்பள்ளி ஆசிரியை

சிறுமியைக் கத்தியால் குத்தியதை தென்கொரியாவில் உள்ள தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை ஒப்புக்கொண்டார்.

கத்தியால் குத்தப்பட்ட 7 வயது சிறுமிக்கு இதயச் செயலிழப்பு ஏற்பட்டது.அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலனின்றி அச்சிறுமி உயிரிழந்ததாக செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 11) தென்கொரியக் காவல்துறை கூறியது.

சொந்தமாகக் காயப்படுத்திக்கொண்ட ஆசிரியைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.அவரை இன்னும் கைது செய்யவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமையன்று (பிப்ரவரி 10) நிகழ்ந்த கத்திக்குத்து தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

சிறுமியின் மரணம் குறித்து கவலை தெரிவித்த தென்கொரியாவின் தற்காலிக அதிபர் சோய் சாங் மோக், சிறுமியின் குடும்பத்தினருக்குத் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.

சிறுமியின் கழுத்திலும் முகத்திலும் காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சிறுமி காயங்களுடன் கிடந்ததை அவரது பாட்டிதான் முதலில் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்