ஆசியா

மீண்டும் பயணத் தடைகளை எதிர்நோக்கும் சீனா!

சீனாவில் தற்போது பரவி வரும் நிமோனியா நோய் நிலைமை உலகலாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறித்த நோய் தொற்றானது  குழந்தைகள் மத்தியில்,  சுவாச நோய் சம்பந்தப்பட்ட பிரச்சினையை கொண்டுவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் சீனா மீண்டும் பயணத் தடைகளை எதிர்நோக்கலாம் எனக் கூறப்படுகிறது. மார்கோ ரூபியோ தலைமையிலான ஐந்து குடியரசுக் கட்சி செனட்டர்கள் நேற்று (01.12) அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பயணத்தைத் தடை செய்யுமாறு ஜனாதிபதி ஜோ பிடனின் நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

“இந்த புதிய நோயினால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி மேலும் அறியும் வரை அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையிலான பயண கட்டுப்பாடுகள், அல்லது பயணத்தை தடை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளன.

வளர்ந்து வரும் நோய்களைக் கண்காணிப்பதற்கான திட்டத்தின் மூலம் தற்போது இனங்காணப்பட்டுள்ள நிமோனியா தொற்று குறித்து உலக சுகாதார நிறுவனம் சீனாவிடம் விளக்கம் கோரியுள்ளது.

இதற்கிடையில் தைவான் அரசாங்கமானது வயதானவர்கள், மிகவும் சிறியவர்கள் மற்றும் மோசமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் சீனாவுக்குப் பயணத்தைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content