ஐரோப்பா

பிரித்தானியாவில் தீப்பிடித்து எரிந்த கேரவன் : சிறுமி உள்பட இருவர் பலி!

பிரித்தானியாவில் லிங்கன்ஷையரின் ஸ்கெக்னஸ் அருகே கேரவன் ஒன்று தீப்பிடித்ததில் இரண்டு பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று (05.04) அதிகாலை 3.53 மணிக்கு இங்கோல்ட்மெல்ஸ் கிராமத்தில் உள்ள கோல்டன் பீச் ஹாலிடே பார்க்கில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், இருப்பினும் இருவரும் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 10 மற்றும் 48 வயதுடையவர்கள் என அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர். தீ விபத்துக்கான சரியான காரணத்தை அதிகாரிகள் கண்டறிய முயற்சித்து வருகின்றனர்.

மேலும் இரண்டு தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்தில் உள்ளதாக மேலும் கூறியுள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்