இலங்கை

இலங்கை – கேக் விற்பனை 25% ஆக குறைவு: பேக்கரி உரிமையாளர்கள்

பண்டிகைக் காலங்களில் கேக் தயாரிப்பதற்கு முட்டைகள் கிடைக்காததால் உள்ளூர் சந்தையில் கேக் விற்பனை 25% வரை குறைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் (ACBOA) தெரிவித்துள்ளது.

வழமையான கேக் விற்பனையில் குறைந்தது 50 வீதத்தை தாங்கள் எதிர்பார்த்திருந்தாலும் அது 25 வீதமாகக் குறைந்துள்ளது என சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

“கேக் தயாரிப்பதற்கு எங்களுக்கு சரியான நேரத்தில் முட்டைகள் கிடைக்கவில்லை. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இன்னும் யார்டுகளில் பாதுகாப்பாக உள்ளன, ஆனால் உள்ளூர் சந்தையில் முட்டைகள் எதுவும் விநியோகிக்கப்படவில்லை,” என்று அவர் கூறியுள்ளார்.

அதனால், இந்த பண்டிகை காலத்தில் கேக் வியாபாரம் வெற்றிபெறவில்லை என்றார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்