இந்தியா விளையாட்டு

200 ஓட்ட வெற்றியிலக்கை நிர்ணயித்த பெங்களூரு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.

துவக்க வீரர் விராட் கோலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து சில நிமிடங்களில் அனுஜ் ராவத் 6 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின்னர் கேப்டன் டூ பிளெசிஸ்-கிளென் மேக்ஸ்வெல் ஜோடி அபாரமாக ஆடி ஸ்கோரை உயர்த்தியது. மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 68 ரன்களும், டூ பிளெசிஸ் 41 பந்துகளில் 65 ரன்களும் விளாசினர். மூன்றாவது விக்கெட்டுக்கு இவர்கள் 120 ரன்கள் சேர்த்தனர்.

இதேபோல் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக் 30 ரன்கள் குவிக்க, பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் சேர்த்தது.

மும்பை அணி தரப்பில் ஜேசன் பெஹ்ரண்டாப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கேமரான் கிரீன், கிறிஸ் ஜோர்டான், குமார் கார்த்திகேயா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது.

(Visited 7 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content