ஆசியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

பஷர் அல்-அசாத்தின் மனைவி லுகேமியா நோயால் பாதிப்பு

பதவி நீக்கம் செய்யப்பட்ட சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் மனைவி அஸ்மா அல்-அசாத், புற்றுநோயான லுகேமியாவுடன் போராடி வருவதாகவும், அவர் உயிர் பிழைப்பதற்கான 50% வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் பிறந்த முன்னாள் முதல் பெண்மணி தொற்று அபாயத்தைக் குறைப்பதற்காக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

அறிக்கையின்படி, அஸ்மா இதற்கு முன்பு 2019 இல் மார்பக புற்றுநோயை எதிர்த்துப் போராடினார். ஒரு வருட சிகிச்சைக்குப் பிறகு அவர் புற்றுநோயற்றவர் என்று அறிவித்தார். ஆனால் இரத்தப் புற்றுநோய் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு மீண்டும் தோன்றியதாக நம்பப்படுகிறது.

சிரிய பெற்றோருக்கு 1975 இல் லண்டனில் பிறந்த அஸ்மா அல்-அசாத் இரட்டை பிரிட்டிஷ்-சிரிய குடியுரிமையைப் பெற்றுள்ளார். முதலீட்டு வங்கியில் தொழிலைத் தொடரும் முன் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பிரெஞ்சு இலக்கியத்தில் பட்டப்படிப்பை முடித்தார். அஸ்மா டிசம்பர் 2000 இல் பஷர் அல்-அசாத்தை மணந்தார். தம்பதியருக்கு ஹஃபீஸ், ஜீன் மற்றும் கரீம் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி