இலங்கை செய்தி

இரு இலங்கையர்களுக்கு ஜப்பானிய அரசின் உயரிய விருது அறிவிப்பு

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்துவதற்கு  பங்களிப்புச் செய்த  இரண்டு இலங்கையர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கோசல ரோஹன விக்கிரமநாயக்க மற்றும் அதுல ரொபேர்ட் பிரான்சிஸ் எதிரிசிங்க ஆகியோருக்கு ஜப்பான் பேரரசர் ‘Oder of the Rising Sun’ விருது வழங்கியுள்ளார்.

Oder of the Rising Sun என்பது வெளிநாடுகளுடனான ஜப்பானின் உறவை மேம்படுத்த பங்களித்த வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது ஆகும்.

இலங்கை-ஜப்பான் நட்புறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான கோசல ரோஹன விக்கிரமநாயக்க, ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதில் பெரும் பங்காற்றியவர்.

ஜப்பான் இலங்கை தொழில்நுட்ப மற்றும் கலாசார சங்கத்தின் முன்னாள் தலைவர் அதுல ரொபர்ட் பிரான்சிஸ் எதிரிசிங்க அவர்கள் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்பு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதில் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார்.

(Visited 2 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content