உலகை அச்சுறுத்தும் குணப்படுத்த முடியாத வைரஸ் : சிகிச்சைகள் இல்லை என்றும் அறிவிப்பு!
மிகவும் ஆபத்தான மற்றும் குணப்படுத்த முடியாத கொடிய வைரஸ் தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த வைராஸால் 08 பேர் உயிரிழந்துள்ளதுடன் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது குறித்த 26 பேருடன் தொடர்பில் இருந்து 300 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ருவாண்டாவின் சுகாதார அமைச்சகம், 30 மாவட்டங்களில் ஏழு மாவட்டங்களில் வழக்குகளைக் கண்டறிந்த பின்னர், இது தொடர்பில் உலகிற்கு அறிவித்துள்ளனர்.
ருவாண்டா அரசாங்கம் WHO மற்றும் கூட்டாளர்களின் ஆதரவுடன் பதிலை ஒருங்கிணைக்கிறது. MVD க்கு தற்போது சிகிச்சை அல்லது தடுப்பூசி எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது.





