கனடாவில் 8 வயது சிறுவனுக்கு ஆம்பர் எச்சரிக்கை விடுப்பு
![](https://iftamil.com/wp-content/uploads/2023/05/boy-jpg.webp)
கனடா – ஒன்ட்டின் தண்டர் பே பகுதியில் கடத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு சிறுவனுக்கு பரவலான ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிரேட்டர் டொராண்டோ ஏரியா (ஜிடிஏ) முழுவதும் உள்ள கைத்தொலைபேசிகளுக்கு செவ்வாய்கிழமை நண்பகலுக்குப் பிறகு இது குறித் அறிவிக்கப்பட்டன.
தண்டர் பே பொலிஸ் சேவை எட்டு வயது எமர்சன் பவுலினைத் தேடி வருகிறது.
அவர் 28 வயதான கிறிஸ்டோபர் பவுலின் உடன் இருப்பதாக நம்பப்படுகிறது. அவர்கள் தந்தை மற்றும் மகன் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது வாகன விவரம் எதுவும் இல்லை. இந்த ஜோடி கடைசியாக ஒன்ட்டின் தண்டர் பே என்ற இடத்தில் காணப்பட்டதாக பொலிசார் கூறுகின்றனர்.
பவுலின் தோள்பட்டை வரை வெளுத்தப்பட்ட பொன்னிற முடியுடன் சுமார் ஐந்தடி-பதினொரு அங்குல உயரம் கொண்டவர்.
வாழ்க்கைத் தேவைகளை வழங்கத் தவறியமை, கடத்தல், சட்டத்திற்குப் புறம்பாக சிறைவைத்தல் மற்றும் விடுதலையை மீறியமை ஆகிய காரணங்களுக்காக குறித்த நபருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர்களது உறவை பொலிசார் குறிப்பிடவில்லை.
நீங்கள் கிறிஸ்டோபர் பவுலினைப் பார்த்தால், உடனடியாக 9-1-1 என்ற எண்ணை அழைக்குமாறு காவல்துறை பொதுமக்களை வலியுறுத்துகிறது.