இலங்கை

இந்தியாவில் உச்சம் தொட்ட காற்று மாசுப்பாடு : அவுதியுறும் மக்கள்!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலைக்குச் சென்றுள்ளதால், மக்கள் அவதியுற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்த பாதுகாப்பான வரம்பை விட குறைந்தது 30-35 மடங்கு மாசு அளவுகளை டெல்லி மற்றும் அதன் அண்டை நகரங்களில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான குளிர்கால மாதங்களில் வெப்பநிலை, புகை, தூசி, குறைந்த காற்றின் வேகம், வாகன உமிழ்வுகள் மற்றும் பயிர்களின் மரக்கட்டைகள் எரிதல் போன்றவற்றால் டெல்லி மற்றும் வட மாநிலங்கள் அபாயகரமான காற்றுடன் போராடுகின்றன.

இம்முறை, எதிர்வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமாகும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சுவிஸ் ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் (ஏக்யுஐ) கண்காணிப்பு அமைப்பின்படி, டெல்லியின் பல பகுதிகளில் இன்று (13.11) மாசு அளவு 500 தொட்டதாக கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்