ஆசியா செய்தி

சிங்கப்பூரில் COVID-19 தடுப்பூசி நிலையங்கள் அனைத்தையும் மூட நடவடிக்கை

சிங்கப்பூரில் கோவிட்-19 நோய்த்தொற்று குறித்த பரிந்துரைகளில் சுகாதார அமைச்சு சில மாற்றங்களைச் செய்துள்ளது.

அதற்கமைய, திங்கட்கிழமை முதல், மேம்படுத்தப்பட்ட JN.1 ரக Pfizer-BioNTech/Comirnaty தடுப்புமருந்துகளும் JN.1 ரக Moderna/Spikevax தடுப்புமருந்துகளும் மக்களுக்கு வழங்கப்படும்.

கோவிட்-19 தொற்றுக்கு எதிராக இன்னும் சிறந்த பாதுகாப்பை அவை வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.

தடுப்பூசித் திட்டத்திற்கான நிபுணர் குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

JTVC எனும் கூட்டுப் பரிசோதனை, தடுப்பூசி நிலையங்களில் தற்போது 5 மட்டுமே இயங்குகின்றன. டிம்பர் மாதம் முதல் அவை மூடப்படும்.

சுமார் 500 தனியார் மருந்தகங்களிலும் 10 பலதுறை மருந்தகங்களிலும் கோவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். 5 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் கோவிட்-19 தடுப்பூசியை ஒரு முறை போட்டுக்கொண்டால் போதும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி