இலங்கை

இலங்கை அம்பலாங்கொடையில் கைவிடப்பட்ட நிலையில் சிசு மீட்பு! பெற்றோரை தேடும் பொலிஸார்

அம்பலாங்கொடை, மாதம்பகம, தேவகொட பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குழந்தை பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொட பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஒரு மாத வயதுடைய சிசு, தேவகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் சுவருக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சுவருக்கு அருகில் கைவிடப்பட்ட சிசுவை பெண்ணொருவர் கண்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் அப்பகுதி மக்களுக்கும் பின்னர் காவல்துறைக்கும் தகவல் கொடுத்தார்.

குழந்தையின் பெற்றோரைக் கண்டறியும் விசாரணைகளை அம்பலாங்கோவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்