செய்தி வட அமெரிக்கா

கனடாவில் தமிழர் ஒருவர் கைது

கனடாவில், Brampton நகரில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தமிழர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் காவல்துறை அதிகாரியை போல் ஆள்மாறாட்டம் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 33 வயதான அனுஷன் ஜெயக்குமார் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

13 வயது சிறுமி கடை தொகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரை சந்தேக நபர் அணுகி, தன்னை ஒரு காவல்துறைஅதிகாரி என கூறி, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

சனிக்கிழமை கைது செய்யப்பட்ட அனுஷன் ஜெயக்குமார், நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாகவும், பொலிசார் அவரின் புகைப்படத்தையும் வெளியிடடுள்ளனர்.

மேலும், சந்தேகநபரால் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர். எவ்வாறாயினும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 11 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content