ஆஸ்திரேலியா

பிஜி தீவில் 6.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்.. வீடுகள் அதிர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி!

பிஜி தீவில் இன்று காலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

தென் பசிபிக் கடலில் நியூசிலாந்து அருகே பிஜி தீவுகள் உள்ளது. நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கும் நாடுகளின் பட்டியலில பிஜி தீவுகள் இடம் பெற்றுள்ளது. இங்கு அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கத்தால் மக்கள் தங்கள் உடமைகளையும், உயிர்களையும் இழந்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிஜி தீவின் தலைநகர் சுவா பகுதியில் இன்று காலை 6.58 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அத்துடன் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

பிஜி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பதை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் உறுதி செய்துள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. அத்துடன் சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித

You cannot copy content of this page

Skip to content