இந்தியா

பீகாரில் அதிர்ச்சி சம்பவம்… பள்ளி வளாகத்திற்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 7 வயது மாணவன்!!

பீகாரில் 7 வயது பள்ளி மாணவன் மாயமான நிலையில், பள்ளி வளாகத்திலேயே மர்மமான முறையில் மாணவனின் சடலம் கிடைத்துள்ள சம்பவத்தை தொடர்ந்து, பள்ளிக்கு உறவினர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவில் டைனி டாட் அகாடமி என்ற பெயரில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 7 வயதுடைய ஆயுஷ் என்ற மாணவன் பயின்று வந்துள்ளார். நேற்று பள்ளிக்கு சென்று மாணவர் மாலை வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் பள்ளிக்கு வந்து மாணவனை தீவிரமாக தேடி உள்ளனர். அவர்களுடன் சேர்ந்து மாணவனின் உறவினர்களும் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர். ஆனால் மாணவன் எங்கும் கிடைக்காததால், இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.பொலிஸாரும் வழக்குப்பதிவு செய்து மாணவனை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை பள்ளி வளாகத்திற்குள் சென்று பார்த்த போது, அங்கு உள்ள கழிவுநீர் ஓடை ஒன்றில் சிறுவன் சடலமாக கிடப்பது தெரிய வந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே மாணவன் உயிரிழந்தது குறித்த தகவல் அறிந்ததும் ஏராளமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பகுதியில் குவிந்தனர்.

பள்ளி நிர்வாகத்தின் அஜாக்கிரதை காரணமாகவே மாணவன் உயிரிழந்ததாக கூறி அவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் பள்ளி வளாகத்தில் இருந்த இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களை தீ வைத்து கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு நூற்றுக்கணக்கான பொலிஸார் விரைந்தனர்.

தீயணைப்புப்படையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மாணவன் உயிரிழந்தது எப்படி என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content