ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் சுற்றிவளைப்பிற்கு சென்ற பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரான்ஸில் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கை ஒன்றின் போது, பாரிய அளவு ஆயுதங்கள், பெருமளவு பணம், போதைப்பொருட்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.

போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும், காவல்துறையினரும் இணைந்து கடந்த செவ்வாய்க்கிழமை Seine-et-Marne நகரில் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டனர்.

அதன்போது வீடொன்றுக்குள் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 11 வெடிகுண்டுகள், ரைஃபிள் வகை துப்பாக்கிகள், தானியங்கி பிஸ்ட்டல் வகை துப்பாக்கிகள், 210,000 யூரோக்கள் பணம், 65 கிலோ கஞ்சா போதைப்பொருள் போன்றவற்றை கைப்பற்றினர்.

அதேவேளை, சம்பவ இடத்தில் இருந்து எவரையும் கைது செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக இடம்பெற்றுவந்த விசாரணைகளை அடுத்தே மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!