இலங்கை செய்தி

தென்கொரியாவிற்கு வேலைக்குச் சென்ற இலங்கை இளைஞர்கள் குழு

தென் கொரியாவில் இவ்வருடம் தொழில் வாய்ப்பைப் பெறும் முதல் குழுவாக 100 இளைஞர்கள் இன்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

அவர்கள் தென் கொரிய வேலைகளைப் பெற்ற 832 வது குழுவாக வெளியேறுகிறார்கள். அவர்களுக்கு தென் கொரியாவில் உற்பத்தித் துறையில் வேலை இருக்கிறது.

இலங்கை அரசாங்கத்திற்கும் தென்கொரிய அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், 2023ஆம் ஆண்டில் 6,412 இலங்கையர்களை தென்கொரியாவில் பணிக்கு அனுப்ப முடியும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக தனது கடமைகளை ஆரம்பித்ததன் பின்னர் தென்கொரியாவில் இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அமைச்சர் மனுஷ நாணயக்கார உள்ளூர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

(Visited 4 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content