இலங்கை

ஊசியால் ஏற்படும் மரணங்கள் குறித்து ஆராய ஐவரடங்கிய குழு நியமனம்!

ஊசி செலுத்தப்பட்ட பின்னர் இடம்பெறும் உயிரிழப்புகள் குறித்து ஆராய்வதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தலைமையிலான ஐவரடங்கிய குழுவொன்றை நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்  குறிப்பிட்டுள்ளார். .

கடந்த சில மாதங்களில் அரசு மருத்துவமனைகளில் நிகழ்ந்த இறப்புகள் குறித்தும் விசாரணை நடத்தும் பணியும் இந்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், மருத்துவம், செவிலியர் மற்றும் ஒவ்வாமை தொடர்பான விரிவான அறிவும் புரிதலும் கொண்ட நிபுணர்கள் ஐவர் அடங்கிய குழுவில் இடம் பெறுவார்கள் என்றும் கூறினார்.

இந்தக் குழு அனைத்து சர்ச்சைக்குரிய மரணங்கள் குறித்தும் முழு விசாரணை நடத்தி சுகாதார அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலை அமைப்பின் ஊடாக மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதற்கு இது உதவும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content