இலங்கை செய்தி

வீதியில் தவறி விழுந்த குழந்தை!! தாயின் மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை

முச்சக்கரவண்டியில் பயணித்த தாயின் கவனக்குறைவால் வீதியில் விழுந்த ஒரு மாத குழந்தை, ரிட்ஜ்வே லேடி சிறுவர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றது.

இருப்பினும் விபத்தை தடுக்காத குழந்தையின் தாய் மீது வழக்குப்பதிவு செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பில் வசிக்கும் 2 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இரண்டு முச்சக்கரவண்டிகளில் கதிர்காமம் ஊடாக நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்த போது நேற்று (29) பிற்பகல் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

ஒரு முச்சக்கர வண்டியில் தாய் மற்றும் தந்தை மற்றும் அவர்களது 6 மற்றும் 3 வயதுடைய இரண்டு பிள்ளைகள் மற்றும் ஒரு மாத குழந்தையும் பயணித்துள்ளனர்.

இதனிடையே தாயின் மடியில் இருந்த ஒரு மாத குழந்தை முச்சக்கரவண்டியில் இருந்து தவறி கீழே விழுந்தது.

ஆனால் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் தாய்க்கு அது தெரியாது.

எவ்வாறாயினும், வீதியில் பயணித்த வேன் ஒன்றின் சாரதி, குறித்த குழந்தையைப் பார்த்து, கித்துல்கல பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

சிறிது தூரம் சென்றபோது குழந்தை இல்லை என்பது தாய்க்கு தெரிய வந்தது.

அதன்படி, வீதியின் இருபுறமும் குழந்தையைத் தேடிக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது, ​​வேறொரு காரில் வந்த ஒருவர், குழந்தை ஒன்று வீதியில் விழுந்து கிடப்பதாகக் கூறியதையடுத்து, வேன் சாரதி குழந்தையை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

பெற்றோர்கள் பொலிஸாரிடம் சென்ற போதும், உடலில் கீறல்கள் காணப்பட்டதால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழந்தையை கித்துல்கல பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

பின்னர் குழந்தையை கரவனெல்ல மருத்துவமனைக்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது.

அதனையடுத்து, சிசுவை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு வைத்தியசாலை நிர்வாகம் தீர்மானித்ததாகவும், எனினும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் சிசுவின் நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியசாலை பணிப்பாளர்  வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்தார்.

(Visited 3 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content