இலங்கையில் விசா வழங்கும் முறையில் ஏற்படவுள்ள மாற்றம்!
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த முறைமையிலிருந்து விலகி தனியார் ஏஜென்சிகள் மூலம் விசா வழங்கும் திட்டம் உள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை விசா வழங்கப்பட்ட முறையால், மொத்த வருமானமும் குடிவரவுத் துறைக்கு நேரடியாகச் சென்றது.
ஆனால் இந்த வேலையை தற்போது தனியாருக்கு வழங்குவதால் அந்த வருமானத்தை இழக்கும் அபாயம் உள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
(Visited 7 times, 1 visits today)