இலங்கை

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

இந்த மாதத்தின் முதல் நான்கு நாட்களில் 28,493 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, சராசரியாக நாளொன்றில் 7,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2023 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு மொத்தமாக 1 இலட்சத்து 7 ஆயிரத்து 639 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்திருந்ததாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், இந்த மாதத்தின் முதல் நான்கு நாட்களில் ரஷ்யாவிலிருந்து 4,279 பேரும் இந்தியாவிருந்து 4,23 பேரும் சுற்றுலா மேற்கொண்டு நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அவ்வாறே, பிரித்தானியாவிலிருந்து 2,592 பேரும், ஜேர்மனியிலிருந்து 1,977 பேரும், சீனாவிலிருந்து 1,950 பேரும் குறித்த காலப்பகுதியிலிருந்து நாட்டுக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!