இலங்கை செய்தி

எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவிற்கு விதிக்கப்பட்டிருந்த வரி நீக்கம்

எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு மீது விதிக்கப்பட்டிருந்த துறைமுகம் மற்றும் விமான நிலைய வரியை ஜனவரி முதலாம் திகதி முதல் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவுக்கான துறைமுகம் மற்றும் விமான நிலைய வரியானது வட் வரியை அமுல்படுத்துவதிலிருந்து நீக்கப்படுவதாக நிதி அமைச்சின் வரி கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்தார்.

எரிபொருள் மீதான 18 சதவீத வட் வரியை நடைமுறைப்படுத்தும்போது, ​​துறைமுகம் மற்றும் விமான நிலைய வரியான 7.5 சதவீதம் அந்த வரியில் இருந்து நீக்கப்படும்.

சமையல் எரிவாயுவுக்கான 18 சதவீத வட் வரியை நடைமுறைப்படுத்துவதில் தற்போது 2.5 சதவீதம் துறைமுகம் மற்றும் விமான நிலைய வரியும் நீக்கப்பட உள்ளது.

அதன்படி, எரிபொருள் மற்றும் எரிவாயு மீது வட் விதிக்கப்பட்ட பின்னர், விலை அதிகரித்தாலும், 18 சதவீதம் அதிகரிக்காது.

பெற்றோல், டீசல், எரிவாயு போன்ற பொருட்களுக்கு அதிகபட்ச விலை நிர்ணயம் செய்யப்படுவதால், அந்தந்த வரி அதிகரிப்பை சரிசெய்து அவற்றின் விலை நிர்ணயிக்கப்படும் என நிதியமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்தார்.

 

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!