இலங்கை செய்தி

விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பெண் கான்ஸ்டபிள்

தம்புள்ளை குருநாகல் பிரதான வீதியின் கலேவெல தலகிரியாகம பிரதேசத்தில் நேற்று (10) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்துள்ளார்.

கான்ஸ்டபிளின் மோட்டார் சைக்கிள் டிப்பர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தம்புள்ளை பொலிஸ் எல்லைக்குட்பட்ட எதபெதிவெவ பகுதியைச் சேர்ந்த சந்திமா ஜும்னி தில்ருக்ஷி என்ற 25 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் கடமை முடிந்து மோட்டார் சைக்கிளில் தம்புள்ளையில் இருந்து கலேவெல நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கலேவெல பிரதேசத்தில் இருந்து தம்புள்ளை நோக்கி டிப்பர் ரக வாகனம் சென்று கொண்டிருந்த போது தலகிரியாகம ஆலயத்திற்கு அருகில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!