இலங்கை

முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை தேடி அகழ்வு பணி முடிவு

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்திருப்பதாக நம்பப்படும் கடற்கரை பகுதி ஒன்றில் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த நம்ப தகுந்த இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதியில் அகழ்வு பணிகள் கடந்த 25 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மூன்றாவது நாளாக இன்றும் கனரக இயந்திரம் கொண்டு அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன இந்த அகழ்வு பணியின் போது தொல்பொருள் திணைக்களம் பிரதேச செயலகம் கிராம சேவையாளர் தடயவியல் பொலிசார், விஷேட அதிரடிப்படையினர் இராணுவத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணியின் போது கடற்கரையில் காணப்பட்ட குறித்த பகுதியானது முற்றுமுழுதாக அகழப்பட்டுள்ளதுடன் அதில் நின்ற மரங்கள் முற்றாக அகற்றப்பட்டு 15க்கும் மேற்பட்ட பனை கன்று வடலிகளும் அகற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு தோண்டப்பட்ட நிலையில் இன்று (27) மாலை 5.45 மணி வரை அகழ்வு பணிகள் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த இடத்தினை மூடுமாறு நீதிபதி பணித்திருந்தார்.

குறித்த பகுதியில் 13 அடி ஆளமும் 17 மீற்றர் நீளம் வரை தோண்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து குறித்த பகுதி மூடப்பட்டுள்ளது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!