இலங்கை

தோட்ட தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்க நடவடிக்கை!

தோட்டத் தொழிலாளர்களுக்கு தலா 10 பேர்ச்சஸ் காணி வழங்குவது தொடர்பில் அமைச்சரவை பத்திரத்தை  சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட கைத்தொழில்கள் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்படி பெருந்தோட்ட கைத்தொழில், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சுற்றுலா மற்றும் காணி ஆகிய அமைச்சுகளுடன் இணைந்து அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏறக்குறைய 250,000 தோட்டத் தொழிலாளர் குடும்பங்களில் 60,000 பேருக்கு காணி உரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய குடும்பங்களுக்கான காணி உரிமையை உறுதிப்படுத்த 5,000 ஹெக்டேயர் தேவை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தனியார் தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகளை சுவீகரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவை விரைவாகக் கொண்டு வருவதற்கு கட்சி பேதமின்றி அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதியுடன் கலந்துரையாட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

(Visited 9 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content