இந்தியா

உதயநிதியின் தலைக்கு ரூ.25 கோடி! அயோத்தி சாமியார் மீண்டும் சர்ச்சை அறிவிப்பு

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.25 கோடி தருவதாக அயோத்தியைச் சேர்ந்த துறவி பரம்ஹன்ஸ் ஆச்சார்யா மீண்டும் அறிவித்துள்ளார்.

தமிழக அமைச்சர் உதயநிதி,”கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை நாம் எதிர்க்க கூடாது. அதன் நாம் ஒழித்துக் கட்ட வேண்டும். அதை போல சனாதனத்தை எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும். அது தான் நாம் செய்யும் முதல் பணி” என்று கூறியிருந்தார்.

அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த இந்த பேச்சுக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பி வந்தன. ஆனாலும், அவர் தான் பேசியது சரி என்றும், வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயார் என்றும் கூறியுள்ளார். பின்னர், உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி என அயோத்தியைச் சேர்ந்த  பரம்ஹன்ஸ் ஆச்சார்யா அறிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் அவர், உதயநிதி ஸ்டாலின் போட்டோவை கிழித்து தீயிட்டு கொளுத்தும் வீடியோ ஒன்றும் வெளியானது.

இந்நிலையில், உதயநிதி தனது கருத்தை வாபஸ் பெற்றால் நாங்களும் வாபஸ் பெறுவோம் இல்லையெனில் அவர் தப்ப முடியாது. ஏற்கனவே அவர் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி என அறிவித்திருந்த நிலையில், அதனை உயர்த்தி ரூ.25 கோடி என அறிவித்துள்ளார்.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!